ஆட்டத்தை துவங்கிய டாடா.. ராணிப்பேட்டையில் 2 மாதத்தில் அடிக்கல்நாட்டு விழா, 2 வருடத்தில் தொழிற்சாலை!!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமத்தின் ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டாரஸ், தமிழ்நாட்டை ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஏற்றுமதி மையமாக மாற்றுவதற்கான திட்டம் வேகமாகச் செயல்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்திக்கும், எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கும் தலைநகரமாக விளங்கும் தமிழ்நாட்டுக்கு ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலை திட்டம் மிகவும் முக்கியமானதாக உள்ளது.

செப்டம்பர் மாதத்திற்குள் 9000 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக இந்த தொழிற்சாலையில் தான் முழுமையாக உற்பத்தி செய்யப்படும் பிரீமியம் வாகனமாக இருக்கும். மேலும் அடிக்கல் நாட்டும் விழா பின்னர் அடுத்த 12 முதல் 18 மாதங்களில் புதிய தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டத்தை துவங்கிய டாடா.. ராணிப்பேட்டையில் 2 மாதத்தில் அடிக்கல்நாட்டு விழா, 2 வருடத்தில் தொழிற்சாலை!!

டாடா குழுமத்திற்கு, தமிழ்நாடு அரசு இந்த புதிய தொழிற்சாலை அமைப்பதற்காக ஏற்கனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கத்திற்கு அருகில் 400 ஏக்கர் நிலத்தைக் கொடுத்துள்ளது. சென்னை-பெங்களூரு தொழில்துறை வழித்தடத்தை இணைக்கும் இந்த திட்டம் ஓசூர் மற்றும் சென்னைக்கு இடையே ஒரு இணைப்பாக இருக்கும்.

சென்னையிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்தின் நன்மை என்னவென்றால், சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களுக்கு அருகில் அமைந்துள்ளதுதான். இதன் மூலம் பனிப்பாக்கத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்கள் உள்நாட்டில் விற்பதை தாண்டி வேகமாகவும், குறைந்த செலவிலும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

பனப்பாக்கத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டு விழா அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டோமொபைல் துறையில் ஒரு தொழிற்சாலை செயல்படுத்துவதற்கு பொதுவாக 12-18 மாதங்கள் ஆகும். எனவே இந்த திட்டம் 2025 இன் பிற்பகுதி அல்லது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டு விழாவில் டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஆகியோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பனப்பாக்கத்தில் JLR தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் என்பதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் கடந்த மாதம் வெளியான தகவல் படி JLR-ன் எலக்ட்ரிஃபைட் மாடியூலர் ஆர்கிடெக்சர் (EMA) அடிப்படையில் தயாரிக்கப்பட்ட JLR பிராண்ட் கார்களும், டாடா எலக்ட்ரிக் வாகனங்கள் உருவாக்கும் என்று தெரிகிறது.

சமீபத்தில், பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்களை சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்து புதிய சாதனையை படைத்தது. இந்த வரிசையில் தற்போது டாடா மோட்டார்ஸ்-ம் இணைய உள்ளது, இதில் முக்கியமாக டாடா மோட்டார்ஸ் ஆடம்பர கார்களை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+