இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றாக இருக்கும் டாடா குழுமத்தின் ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் மட்டும் சுமார் 8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த திடீர் உயர்வுக்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு சேவை வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் வெளியிட்ட ஒரு அறிவிப்பு தான்.
டாடா மோட்டார்ஸ் முதலீட்டாளர்கள் இன்று காலை முதல் மகிழ்ச்சியில் உச்சத்தில் உள்ளனர் என்றால் மிகையில்லை, ஒரே நாளில் 8 சதவீதம் லாபம் என்றால் கேட்கவா வேண்டும், இந்த தடாலடி உயர்வுக்கும், கோல்ட்மேன் சாக்ஸ் அறிவி்ப்புக்கும் தொடர்பு உள்ளதா என்றால் கட்டாயம் உள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2023 ஆம் ஆண்டில் மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் சுமார் 3,63,361 கார்களை விற்பனை செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொந்த தயாரிப்புகள் மட்டும் அல்லாமல் டாடா மோட்டார்ஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜாகுவார் லேண்டு ரோவர் விற்பனையும் சேர்ந்து மார்ச் காலாண்டில் கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 8 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இக்காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகன பிரிவு, பயணிகள் வாகன பிரிவு, ஜாக்குவார் லேண்டு ரோவர் ஆகிய 3 முக்கிய பிரிவுகளும் மார்ச் காலாண்டு முடிவில் சரிவில் இருந்து மீண்டு வரும் பாதையை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தான் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் டாடா மோர்ட்டார்ஸ் பங்குகளின் டார்கெட் விலையை முந்தைய அளவான 480 ரூபாயில் இருந்து 550 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து NOMURA INDIA 508 ரூபாயும், CLSA 544 ரூபாயும், ஜேபி மோர்கன் 438 ரூபாயும், BOFA SECURITIES 475 ரூபாய் விலையை டார்கெட் விலையாக அறிவித்துள்ளது.
இதன் எதிரொலியாக திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் கிட்டதட்ட 8 சதவீதம் உயர்ந்து 473.30 ரூபாய் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களை மனம் குளிரவைத்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 52 வார உயர்வு விலை 494.40 ரூபாய். திங்கட்கிழமை வர்த்தக முடிவில் டாடா மோட்டார்ஸ் பங்குகள் விலை 5.31 சதவீதம் உயர்ந்து 460.90 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications