டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் பழைய ஃப்ரீலேண்ட்ர் (Freelander) மாடலை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது டாடா நிர்வாகம். இந்த முறை ஃப்ரீலேண்ட்ர் காரை பெட்ரோல் - டீசல் காராக இல்லாமல் எலக்ட்ரிக் வாகனமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜாக்வார் லேண்ட் ரோவர் நிறுவனம் சீன சந்தையை குறி வைத்து செர்ரி(chery) ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் கூட்டணியில் செய்து ஃப்ரீலேண்டரை எலக்ட்ரிக் வாகனமாக மீண்டும் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

எலக்ட்ரிக் வாகனமாக ஃப்ரீலேண்டரை அறிமுகப்படுத்துவதன் மூலம் டாடா மோட்டார்ஸ் எலக்ட்ரிக் வாகன துறையில் தங்களுடைய நிறுவன வளர்ச்சியையும் லாபத்தையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் செர்ரி ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் இணைந்து ஒரு கூட்டு நிறுவனத்தை உண்டாக்கியுள்ளது.
இவர்கள் இருவரும் இணைந்து ஃப்ரீலேண்டர் என்ற பிராண்டின் பெயரிலேயே அடுத்தடுத்த எலக்ட்ரிக் வாகனங்களையும் தயாரிக்க உள்ளனர். இந்தக் கூட்ட நிறுவனம் சிஜேஎல்ஆர் (CJLR) என என்ற பெயரில் செயல்பட உள்ளது.
செர்ரி ஆட்டோமொபைல் நிறுவனத்தின் உற்பத்தி வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்டு இந்த கார்கள் தயாரிக்கப்பட உள்ளன. ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தை பொறுத்தவரை சர்வதேச அளவில் வாகன சந்தையில் முக்கிய இடத்தை பிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காகவே செர்ரி ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் இணைந்து கூட்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
சீனாவில் உள்நாட்டு நிறுவனங்களான பிஒய்டி (BYD) மற்றும் கிரேட் வால் மோட்டார் (Great wall motor) நிறுவனங்கள் முன்னணி எலக்ட்ரிக் வாகன விற்பனை நிறுவனங்களாக உள்ளன. இதனிடையே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சீனாவின் சென்சூவில் உள்ள ஆலையில் இந்த புதிய ஃப்ரீலேண்ட்ர் மாடல்களை தயாரித்து முதல் கட்டமாக விற்பனை செய்ய உள்ளது. முதலில் சீன சந்தை தான் இலக்கு, பின்னர் அங்கிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது.
ஃப்ரீலேண்டர் மாடலை டாடா மோட்டர்ஸ் 1997இல் அறிமுகம் செய்தது. 2015 ஆம் ஆண்டு வரை இது பயன்பாட்டில் இருந்த நிலையில் ஃப்ரீலேண்டர் மாடலை நிறுத்துவதாக அறிவித்தது. அதற்கு பதிலாக டிஸ்கவரி ஸ்போர்ட் என்பதை 2016 ஆம் ஆண்டிலிருந்து அறிமுகம் செய்தது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் 2024ஆம் நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் விற்பனை விகிதத்தில் 81% வளர்ச்சியடைந்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இதனை இரண்டு மடங்கு அதிகரிக்க வேண்டுமென டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரை 2024 ஆம் நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் மூன்று மடங்கு அதிக லாபத்தை பெற்ற நிறுவனமாக இருக்கிறது. அதாவது முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் 5,496 கோடி ரூபாய் லாபம் பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டில் அது 17,528 கோடி ரூபாயாக உயர்ந்தது.
Story written by: Devika
More From GoodReturns

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!

இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்!! சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்த மத்திய அரசு!!

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

எரிபொருள் நெருக்கடி.. அரசு ஊழியர்களின் சம்பளம் 30% வரை கட்..!!



Click it and Unblock the Notifications