டாடா மோட்டார்ஸின் மாஸ் திட்டம்.. 2025-க்குள் 10 புதிய மின்சார வாகனங்கள் அறிமுகம்.. பங்கு விலை என்ன!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டாடா மோட்டார்ஸின் மாஸ் திட்டம்.. 2025-க்குள் 10 புதிய மின்சார வாகனங்கள் அறிமுகம்.. பங்கு விலை என்ன!

 

நாட்டின் மிகப்பெரிய வணிக குழுமமான டாடா மோட்டார்ஸ் உப்பு முதல் தங்க நகை வரையிலான பல்வேறு வணிகங்களை செய்து வருகின்றது.

குறிப்பாக நாட்டின் மிகப்பெரிய வணிக வாகன உற்பத்தியாளராகவும் இருந்து வருகின்றது. தற்போது மேன்மேலும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு தனது வணிகத்திலும் மாற்றம் செய்து வருகின்றது இந்த குழுமம்.

அந்த வகையில் மின்சார வாகன உற்பத்தியில் பல அதிரடியான அறிவிப்புகளை கொடுத்துள்ளது.

மின்சார வாகன தேவை அதிகரிக்கலாம்

மின்சார வாகன தேவை அதிகரிக்கலாம்

தற்போது எரிபொருளின் விலையானது ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், மின்சார வாகனங்களுக்கான தேவையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. மேலும் சுற்று சூழல் நிலையை கருத்தில் கொண்டு, மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் விதமாக, சில சலுகைகளை அரசும் அறிவித்துள்ளது. இதனால் மின்சார வாகன உற்பத்தியினை பல நிறுவனங்களும் முன்னெடுத்து வருகின்றன.

ஆண்டு கூட்டத்தில் அறிவிப்பு

ஆண்டு கூட்டத்தில் அறிவிப்பு

இந்த நிலையில் நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், 2025ம் ஆண்டுக்குள் 10 புதிய மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் என் சந்திரசேகரன், 76வது ஆண்டு கூட்டத்தில் கூறியுள்ளார்.

 மின்சார வாகனங்கள் உற்பத்தி
 

மின்சார வாகனங்கள் உற்பத்தி

2025ம் ஆண்டிற்குள் டாடா மோட்டார்ஸ் தனது பட்டியலில் புதிய 10 BEV வாகனங்களைக் கொண்டிருக்கும். மேலும் நாடு முழுவதும் சார்ஜிங் பாயிண்டுகளை அமைக்க நாங்கள் விரைவில் முதலீடு செய்ய உள்ளோம். மேலும் பேட்டரி உற்பத்திக்காக இந்தியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஒப்பந்தம் செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இனி அதிகரிக்கும்

இனி அதிகரிக்கும்

நடப்பு ஆண்டில் 2% மின்சார வாகனங்களை அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டில் 4000 டாடா நெக்ஸான் வாகனங்களை விற்பனை செய்துள்ளோம் என சந்திரசேகரன் கூறியுள்ளார். இது வரும் ஆண்டுகளில் இன்னும் அதிவேகமாக அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

பயணம்

பயணம்

தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கம் 150 நாடுகளில் உள்ளன. நாங்கள் 7,50,000 பேருக்கு மேல் பணிபுரிகின்றோம். 650 மில்லியன் நுகர்வோரின் வாழ்க்கையைத் தொடுகின்றோம். எங்களுக்கு முன்னால் இன்னும் நீண்ட பயணம் உள்ளது. இது சரியான தெளிவான பயணம். ஆக இலக்குகளை தொட, நாங்கள் தொடர்ந்து பணிபுரிவோம் என்று சந்திரசேகரன் கூறியுள்ளார்.

டாடா மோட்டார்ஸ் பங்கு விலை

டாடா மோட்டார்ஸ் பங்கு விலை

இதே டாடா மோட்டார்ஸின் பங்கு விலையானது என்.எஸ்.யில் சற்று குறைந்து 341.55 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

இதே போல் பி.எஸ்.இ-யில் 0.31% குறைந்து, 341.80 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்று அதிகபட்சமாக 346.50 ரூபாயாகவும், குறைந்தபட்சம் 341.35 ரூபாயாகவும் இதுவரையில் உள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata motors to launch 10 new electric vehicles by 2025; check details here

Tata motors latest updates.. Tata motors to launch 10 new electric vehicles by 2025; check details here
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X