இந்திய விண்வெளி துறையில் புதிய மைல்கல் சாதனை படைக்கப்பட்டு உள்ளது, முதல் முறையாகத் தனியார் துறை நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் ராணுவ தர நிலப்பட செயற்கோள் (Military Grade Geospatial Satellite) வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தப்பட்டு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் பாதுகாப்புத் துறை புதிய வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்ல துவங்கியுள்ளது.
இந்த உயர் தொழில்நுட்ப செயற்கைக்கோள் கர்நாடகாவில் உள்ள வேமகல் (Vemagal) என்ற இடத்தில் அமைந்துள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

“TSAT-1A” என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் “பேண்ட்வேகன்-1” (Bandwagon-1) விண்வெளி திட்டத்தின் மூலம் அமெரிக்காவின் ஃப்ளோரிடா-வில் இருந்து விண்ணுக்குச் செலுத்தப்பட்டது.
டாடா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த TSAT-1A செயற்கைக்கோள் என்பது துல்லியமான படங்கள் வழங்கும் புதிய தலைமுறை செயற்கைக்கோள் ஆகும். இது ஒரு “சப் மீட்டர் தெளிவுத்திறன் கொண்ட இமேஜிங் செயற்கைக்கோள்” (Sub-metre Resolution Imaging Satellite) ஆகும். இதன் மூலம் எடுக்கப்படும் படங்கள் ஒரு மீட்டருக்கு குறைவான பிக்சல் (Pixel) திறன் கொண்ட மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட படங்களாக இருக்கும்.
இந்த செயற்கைக்கோள் மூலம் பெறப்படும் உயர் தரப் படங்கள் இந்திய ராணுவத்திற்கு பெரும் உதவியாக இருக்கும். எதிரி நாடுகளின் நிலப்பகுதிகள், அங்குள்ள ராணுவ நடமாட்டங்கள் போன்றவற்றைத் துல்லியமாகக் கண்காணிக்க இயலும். முன்னதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) மூலம் ராணுவ உளவு செயற்கைகோள் (Military Spy Satellites) விண்ணுக்குச் செலுத்தப்பட்டிருந்தாலும், தனியார்த் துறையில் இதுவே முதல் முயற்சி.

TASL நிறுவன அதிகாரிகள் கூறுகையில், இந்த செயற்கைக்கோள் தற்போது சரியான சுற்றுப்பாதையில் இருப்பதற்கான சிக்னலை அனுப்பியுள்ளது. மூன்று வாரக் காலத்திற்குள் இதன் மீதான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முழு திறன் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TASL நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு சுக்கரண் சிங் கூறுகையில், இது வெறும் முதல் படி தான், இதேபோன்ற செயற்கைக்கோள்களைக் கொண்ட தொகுப்பை (Constellation) எதிர்காலத்தில் விண்ணுக்கு செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இவர்களது உற்பத்தி நிலையம் ஆண்டுதோறும் 25 லோ எர்த் ஆர்பிட் (LEO) செயற்கைக்கோள்களை உருவாக்கும் திறன் கொண்டது. இந்த LEO செயற்கைக்கோள்கள் சாட்லைஜிக் இன்க் என்னும் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications