டாடா குழுமத்தின் விருந்தோம்பல் நிறுவனமான இந்தியன் ஹோட்டல்ஸ் கோ லிமிடெட், 2025 ம் ஆண்டுக்குள் மொத்தம் 300 ஹோட்டல்களை இலக்காக கொண்ட நிறுவனமாக மாற்றும் நடவடிக்கையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தியன் ஹோட்டல்ஸ் கோ லிமிடெட் நிறுவனம் தற்போது 242 ஹோட்டல்களை கொண்டுள்ளது என்பதும், இதில் 61 ஹோட்டல்கள் வளர்ச்சியில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவற்றில் மொத்தம் 29,000 அறைகளைக் கொண்ட தாஜ், செலிக்யூஷன்ஸ், விவாண்டா மற்றும் ஜிஞ்சர் ஆகிய ஹோட்டல்களும் அடங்கும்
டாடா குழுமம்
டாடா குழுமத்தின் அனைத்து நிறுவனங்களும் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்தியன் ஹோட்டல்ஸ் கோ லிமிடெட் நிறுவனமும் கணிசமான வாடிக்கையாளர்களை கொண்டு மிகப்பெரிய வளர்ச்சியை கண்டு வருகிறது.
மாதம் இரண்டு ஹோட்டல்கள்
கடந்த 24 மாதங்களில், ஒவ்வொரு மாதமும் இரண்டு ஹோட்டல் கையொப்பங்களுடன் இந்தியன் ஹோட்டல்ஸ் கோ லிமிடெட் வேகமாக விரிவடைந்து வருகிறது என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான புனித் சத்வால் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
300 ஹோட்டல் இலக்கு
2025 ஆம் ஆண்டிற்குள் 300-ஹோட்டல் போர்ட்ஃபோலியோ என்ற எங்கள் இலக்கை அடைய இந்தியன் ஹோட்டல்ஸ் கோ லிமிடெட் தயாராகி வருகிறது என்று அவர் மேலும் கூறினார். மேலும் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, நிறுவனத்தின் முதன்மையான தாஜ் ஹோட்டல் 2025ஆம் ஆண்டுக்குள் 100 ஹோட்டல்களை கொண்டிருக்கும் என்றும் தெரிவித்தார். தற்போது இந்தியாவில் தாஜ் ஓட்டலின் எண்ணிக்கை 89 ஆக உள்ளது.
அதிகரிக்க திட்டம்
மேலும் Vivanta மற்றும் SeleQtions ஆகிய பிராண்டுகள் 64 இல் இருந்து 75 ஹோட்டல்கள் என அதிகரிக்கும் என்றும், மற்றொரு பிராண்டான Ginger, தற்போது 89 இல் இருந்து 125 ஹோட்டல்களாக அதிகரிக்கும் என்று நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வடகிழக்கு பகுதி
இதுகுறித்து இந்தியன் ஹோட்டல்ஸ் கோ லிமிடெட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "முக்கிய பெருநகரங்கள், மாநில தலைநகரங்கள், வளர்ந்து வரும் நகரங்கள், வணிக மையங்கள் மற்றும் பிரபலமான சுற்றுலா பகுதிகள் ஆகியவற்றில் எங்களது நிறுவனத்தின் ஹோட்டல்களை புதியதாக நிறுவ திட்டமிட்டுள்ளோம் என்றும் தெரிவித்தார். மேலும் வடகிழக்கு பகுதியிலும் எங்கள் கால்தடத்தை விரிவுபடுத்துவோம் என்றும் கூறினார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications