மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டாடா குழுமம் எதிர்காலத்தில் வர இருக்கும் மாற்றத்தின் ஒரு பகுதியாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பேட்டரி தொழிற்சாலையைத் தொடங்குவதற்கான ப்ளூ பிரிண்ட்-ஐ தயாரித்து வருவதாக டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
CII வர்த்தக உச்சி மாநாடு 2022-ல் பேசிய சந்திரசேகரன், டாடா குழுமம் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்க ஒரு பெரிய மாற்றத்தில் இருப்பதாகவும், கார்பன் பயன்பாட்டை குறைப்பதற்காக வைத்துள்ள இலக்கு குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும்" என தெரிவித்தார்.
5ஜி
எங்களது முக்கிய வணிகங்களில் டிஜிட்டல், தரவு, செயற்கை நுண்ணறிவு போன்றவற்றைப் புகுத்தி எதிர்காலத்துக்குத் தேவையான மாற்றங்களைச் செய்து வருகிறோம். உலகளாவிய சந்தைகளுக்கு 5ஜி மற்றும் அதற்கு தொடர்புடைய தொலைத்தொடர்பு சாதனங்களை உருவாக்க ஒரு நிறுவனத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம்.
ப்ளூ பிரிண்ட்
இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் பேட்டரியை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை அமைக்க ப்ளூ பிரிண்ட் தயார் செய்துவருகிறோம்.
கார் உற்பத்தி
பயணிகள் கார் உற்பத்தியில் குறிப்பிடத்தக்கப் பல மாற்றங்களைச் செய்துள்ளோம். அதுதான் தற்போது எங்களது மோட்டார் சந்தை விரிவடைந்து வருவதற்கான காரணமாக உள்ளது. மாற்று எரிபொருள் திட்டங்களுக்காக ஹைட்ரஜன் எரிபொருள் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டு வருகிறோம். ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் நிறுவனங்களிலும் இதை செய்ய திட்டமிட்டு வருகிறோம்.
சாதனை
எலக்ட்ரிக் கார் விற்பனையில் நெக்ஸான் ஈவி மற்றும் டைகர் ஈவி வாகனங்கள் அதிகளவில் விற்று சாதனை செய்துள்ளது. விரைவில் 500 கிலோ மீட்டர் வரையில் செல்லும் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய அண்மையில் அவியா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். மினி டிரக் டாடா ஏஸ் வாகனங்களில் எலக்ட்ரிக் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
ஹட்ரஜன் எரிபொருள், ஸ்டீல் என எல்லாவற்றிலும் புதிய மாற்றங்களைச் செய்ய டாடா நிறுவனம் ப்ளூ பிரிண்ட் தயார் செய்து வருகிறது என சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.
டாடா குழுமம்
டாடா குழுமம் இந்தியாவில் செய்யாதே தொழிலே இல்லை என கூறலாம். குண்டூசி முதல் விமானம் உதிரிபாகங்கள் உற்பத்தி வரை என இந்தியாவின் மிகப் பெரிய வணிக சாம்ராஜியமாக உள்ளது.
More From GoodReturns

ஈரான்-இஸ்ரேல் மோதல்: இந்தியாவுக்கு தான் பெரிய பாதிப்பு.. அடுத்தடுத்து நடக்கும் பாதிப்பு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

பட்ஜெட் மாசத்துல மத்திய அரசுக்கு பணமழை: 8% உயர்ந்த ஜிஎஸ்டி வருவாய்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications