இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக விளங்கும் டாடா குழும்மத்தின் தலைவராக இகுக்கும் என்.சந்திரசேகரன் டாடா டிரஸ்ட் நிர்வாகத்தின் கடுமையான போக்கின் காரணமாக தனக்கு பதவி நீட்டிப்பு வேண்டாம் என்னும், தற்போதையை பதவிக்காலம் முடிந்த உடன் வெளியேறுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு பங்குச்சந்தை, முதலீட்டாளர்கள், டாடா குழும ஊழியர்களை தாண்டி மத்திய அரசு வரையில் எதிரொலித்தது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் புதிய சேர்மன் தேடுவதற்கான பணிகள் நடந்து வரும் வேளையில் புது பிரச்சனை உருவாகியுள்ளது.

சந்திரசேகரனுக்காக டாடா சன்ஸ் நிர்வாக குழு இரண்டாக உடைந்துள்ளது, ஒரு பிரிவு சந்திரசேகரனின் ராஜினாமாவை ஏற்க கூடாது என்றும், மேலும் அவரை பணியில் தொடர் வேண்டும் என கேட்க வேண்டும் என கூறி வருகிறது, மற்றொரு பிரிவின் சந்திரசேகரன் வெளியேறலாம் என்ற நிலைப்பாட்டை கொண்டு உள்ளது.
இதனால் சந்திரசேகரன் தொடர்வது குறித்து நிர்வாக கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தலாம் என எதிர்பார்ப்பு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளையில் டாடா சன்ஸ் நிறுவனத்தில் அதிக பங்குகளை வைத்திருக்கும் டாடா டிரஸ்ட் அமைப்புகளில் ஒன்றான Sir Dorabji Tata Trust டாடா சன்ஸ் நிர்வாக குழுவிற்கு புதிய சேர்மன்-ஐ தேர்வு செய்யும் குழுவை அமைக்க வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளது. மற்றொரு முக்கிய டிரஸ்ட் அமைப்பான சார் ரத்தன் டாடா டிரஸ்ட் அமைப்பு இத்தகைய முக்கியமான நிர்வாக முடிவுகளை எடுக்க முடியாத நிலையில் உள்ளது.
உண்மையில் சந்திரசேகரனின் ராஜினாமா டாடா சன்ஸ் நிர்வாக குழுவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது டாடா குழுமத்தின் உயர்மட்ட குழுவில் இருக்கும் ஒரு நிலையற்ற தன்மையை காட்டுகிறது.
ரத்தன் டாடா மறைவிற்கு பின்பு டாடா டிரஸ்ட் அமைப்பின் அதிகாரத்தை நோயல் டாடா பெற்ற நாளில் இருந்து பல ஆண்டுகாலம் நிர்வாக குழுவில் இருந்து முக்கியமான நபர்கள் வெளியேறினர், வெளியேற்றப்பட்டனர். இதில் விஜய் சிங், மெஹில் மிஸ்திரி, வேனு ஸ்ரீனிவாசன் ஆகியோரும் அடக்கம்.
இதனால் ஒட்டுமொத்த உயர்மட்ட நிர்வாகமும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இன்று டாடா சன்ஸ் நிறுவனத்தின் AGM கூட்டம் நடக்க உள்ளதால் சந்திரசேகரன் தொடர்வது குறித்து வாக்கெடுப்பு தொடர்பான விஷயங்கள் முக்கியதுவம் பெற்றுள்ளது, திட்டமிட்டப்படி AGM கூட்டம் நடந்தால் மதிய நேரத்தில் கூட்டம் நடக்கும்.
இக்கூட்டத்தில் முக்கிய சிக்கலாக இருந்தது சார் ரத்தன் டாடா டிரஸ்ட் அமைப்பின் பங்கேற்பு தான், தற்போது வெளியாகியுள்ள தகவல் படி சார் டோராப்ஜி டாடா டிரஸ்ட் அமைப்பே இணைந்து பிரதிநிதிப்படுத்தும் என கூறப்படுகிறது.
ஆனால் டாடா சன்ஸ் நிர்வாக குழு கட்டாயம் இதை ஏற்காது என்ற கருதும் நிலவுகிறது. இதனால் டாடா சன்ஸ் AGM கூட்டம் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

