டாடா சன்ஸ்: ஆகஸ்ட் 18 கூட்டம் நடக்காது..? மகாராஷ்டிரா அரசு வைத்த செக்!

இந்திய வர்த்தக சந்தையை புரட்டிப்போட்ட டாடா சன்ஸ் சேர்மன் என்.சந்திரசேகரனின் ராஜினாமாவின் தாக்கம் இன்னும் சந்தையை விட்டு நீங்காத நிலையில், அடுத்த அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. டாடா சன்ஸ் தலைவர் பதவி நீட்டிப்பு, டாடா சன்ஸ் டைரக்டராக மீண்டும் நியமனம் செய்யும் முக்கியமான முடிவுகளை ஆகஸ்ட் 18ஆம் தேதி திட்டமிடப்பட்டு இருந்த கூட்டத்தில் முடிவுகள் எடுக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் இக்கூட்டத்தின் முடிவுகள் தனக்கு சாதமாக இருக்காது என்பதால் முன்கூட்டியே சந்திசேகரன் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது டாடா சன்ஸ்-ன் முக்கிய பங்குதார்களில் ஒருவரான Sir Ratan Tata Trust அமைப்பு விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி மகாராஷ்டிரா அரசின் சேரிட்டி கமிஷ்னர் எவ்விதமான நிர்வாக முடிவுகளிலும் ஈடுப்பட கூடாது என உத்தரவிட்டது.

டாடா சன்ஸ்: ஆகஸ்ட் 18 கூட்டம் நடக்காது..? மகாராஷ்டிரா அரசு வைத்த செக்!

இதனால் ஆகஸ்ட் 18ஆம் தேதி நடக்கும் AGM கூட்டத்தில் Sir Ratan Tata Trust சார்பாக யாரும் கலந்துக்கொள்ள முடியாது. எனவே கூட்டம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளையில் டாடா சன்ஸ் இதுவரையில் AGM கூட்டம் தொடர்பாக எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இக்கூட்டத்தில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான முடிவுகளை எடுக்க 5 நபர் கொண்ட குழு குறித்த அறிவிப்பும், விளக்கமும் கொடுக்கப்படும். மேலும் சந்திரசேகரன் மீண்டும் டாடா சன்ஸ் டைரக்டராக நியமிக்கப்படாவிட்டால் சேர்மனாக எஞ்சியுள்ள 6 மாத காலம் பணியாற்ற முடியாது என்பதால் இடைக்கால சேர்மன் கட்டாயம் அறிவிக்கப்படுவார், இது நோயல் டாடாவாக இருக்கலாம்.

ஆனால் Sir Ratan Tata Trust தொடர்பான பிரச்சனை, டாடா டிர்ஸட் மற்றும் டாடா சன்ஸ்-க்கு ஓரே தலைவர் இருக்க கூடாது போன்ற பல சிக்கல் இருக்கும் காரணத்தால் டாடா சன்ஸ்-ன் ஏஜிஎம் கூட்டம் அவசர கால அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும்.

இடைக்கால தலைவராக இருக்கும் நோயல் டாடாவுக்கு எவ்விதமான தடையும் இருக்காது என்பதால் புதிய தலைவர் தேர்வு செய்யும் வரையிலும், ரத்தன் டாடா டிரஸ்ட் அமைப்பின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரையிலும் நோயல் டாடா தொடர வாய்ப்புள்ளது.

இல்லையெனில் டாடா சன்ஸ் நிறுவனத்தில் தற்போதைய தலைவர்கள் இப்பொருப்பை ஏற்கவும் வாய்ப்புள்ளது.

டாடா குடும்பத்தின் பல்வேறு டிரஸ்ட் அமைப்புகள் இணைந்து சுமார் 66 சதவீத பங்குகளை வைத்துள்ளது. அடுத்தாக ஷாபூர்ஜி பலோன்ஜி குடும்பம் 18.37 சதவீத பங்குகளை வைத்துள்ளது. ஆனால் AGM கூட்டத்தில் ஷாபூர்ஜி பலோன்ஜி குடும்பத்திற்கு அதிகாரமில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+