ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் ஆட்டம் இன்று வாழ்வா சாவா என்று துவங்கிய நிலையில், அனைவரின் கணிப்பின் படி இந்திய அணி அடித்துத் துவைத்து 397 ரன்களை எடுத்து அசத்தியது.
இதில் முக்கியமாக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 50 சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி எட்டியது மட்டும் அல்லாமல் பல வருடங்களாக யாராலும் தொட முடியாத சச்சின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி. இதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் 67 பந்துகளில் 100 ரன்களை எடுத்து அசத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்யத் துவங்கியது முதல் 5 ஓவர் தொடர்ந்து பாலுக்குப் பால் ரன் அடித்து விக்கெட்டை கட்டுப்படுத்தினாலும் ஷிமி-யின் பவுலிங்-ஐ எதிர்கொள்ள முடியாமல் முதல் விக்கெட்-ஐ இழந்தது நியூசிலாந்து அணி, இதைத் தொடர்ந்து பெரும் நம்பிக்கையாக இருந்த ரச்சின் ரவிந்திராவும் சொற்ப ரன்களில் ஆட்டத்தை இழந்தது மூலம் நியூசிலாந்து ஷாக்கானது.
அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் ஆட்டம் விறுவிறுப்பாக நடத்து வரும் வேளையில் இந்தப் போட்டியை நேரில் காண கௌதம் மேனன், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியவோர் வந்த நிலையில், இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த்-ம் வந்திருந்தார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் லதா ரஜினிகாந்த், அனிரூத் தந்தை ரவிசந்திரன் ஆகியோரும் இருந்தனர். இவர்களுடன் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் தலைவரும், தமிழருமான சந்திரசேகரனும் மேட்ச் பார்த்து ரசித்தார்.
இந்திய வர்த்தகச் சந்தையில் சந்திரசேகரன் தலைமையில் பல புதிய துறையில் வேகமாக வளர்ந்து வரும் டாடா குழுமம், அடுத்ததாகச் செமிகண்டக்டர் துறையில் இறங்க முயற்சி செய்து வருகிறது. இந்தப் பிசியான நேரத்தில் தீவிர கிரிக்கெட் ரசிகரான சந்திரசேகரன் மும்பை வான்கடே மைதானத்தில் மிஸ் செய்யாமல் பார்த்து ரசித்துள்ளார்.
More From GoodReturns

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: முகேஷ் அம்பானிக்கு கிடைத்த அட்சய பாத்திரம்!! ஒவ்வொரு நொடிக்கும் காசு!!

தோனி-க்கு நிகராக சஞ்சு சாம்சன்.. குரு சிஷ்யன் என்றால் சும்மாவா..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications