இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக வளங்கும் டாடா குழுமத்தின் சந்திரசேகரன் பதிவி நீட்டிப்பு வேண்டாம் என அறிவித்த பின்பு அடுத்தடுத்து பிரச்சனைகள் வெடிக்க துவங்கியுள்ளது.
டாடா குழுமத்தின் தாய் நிறுவனமாக கருதப்படும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ஆக இருந்த என்.சந்திரசேகரன் தனக்கு பதவி நீட்டிப்பு வேண்டாம் என கூறிய நிலையில் புதிய தலைவரை தேடும் பணியில் டாடா சன்ஸ் நிர்வாக குழு அதிதீவிரமாக இறங்கியுள்ளது.

காரணம் சந்திரசேகரனின் பதவிக்காலம் பிப்ரவரி 2027 உடன் முடிவடைகிறது. இதற்கிடையில் சந்திரசேகரனின் அடுத்த அத்தியாயம் எங்கே என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வரும் இதேவேளையில், டாடா குழுமத்தில் 2 பெரும் பிரச்சனைகள் வெடித்துள்ளது.
முதலாவது டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது குறித்து எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தையும் ஆர்பிஐ ரத்து செய்துள்ளால் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது.
இரண்டாவது விஷயம் டாடா சன்ஸ் நிறுவனத்தில் சுமார் 18.4 சதவீத பங்குகளை வைத்திருக்கும் எஸ்பி குரூப் தனது பங்குகளை விற்க கடும் முயற்சிகளை செய்து வருகிறது, காரணம் எஸ்பி குரூப் தற்போது பெரும் கடன் நெருக்கடியில் உள்ளது.
இதுவிரண்டுக்கும் தீர்வு காண வேண்டிய நெருக்கடியில் டாடா சன்ஸ் உள்ளதால் புதிய தலைவரை தேடுவதை விட்டுவிட்டு இந்நிறுவனத்தின் நாமினேஷன் மற்றும் ரெமுனரேஷன் கமிட்டி மீண்டும் என்.சந்திரசேகரன் அப்பதியில் தொடருமாறு கேட்டுக்கொண்டு உள்ளது.
இது டாடா குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகத்தில் மிகப்பெரிய டிவிஸ்ட் ஆக பார்க்கப்படுகிறது, சந்திரசேகரனின் பதவி காலம் பிப்ரவரி 2027 வரையில் இருந்தாலும் இவர் மீண்டும் டாடா சன்ஸ் டைரெக்டராக நியமிக்கப்படவில்லை, இதேவேளையில் பதவி நீட்டிப்பு வேண்டாம் என தானாக முன்வந்து அறிவித்துள்ளார்.
மேலும் தனது முடிவுக்கு பின்னால் இருக்கும் அந்த ஒற்றை நபரை குறிப்பிட்டும் அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் ஹரிஷ் மன்வானி, அனிதா மரங்கோலி ஜார்ஜ் மற்றும் வேணு சீனிவாசன் அடங்கிய டாடா சன்ஸ் நிறுவனத்தின் Nomination and Remuneration Committee மீண்டும் சந்திரசேகரனை அழைத்துள்ளது.
இத்தகைய முக்கியமான முடிவை எடுக்க காரணம், சமீபத்தில் டாடா சன்ஸ் தொடர்ந்து பங்குச்சந்தையில் பட்டியலிடாமல் தனியார் நிறுவனமாகவே தொடர இந்நிறுவனம் வாங்கிய NBFC உரிமத்தை ஆர்பிஐ-க்கு திரும்ப கொடுக்கப்பட்ட நிலையில், ஆர்பிஐ இதை நிராகரித்தது. இதனால் டாடா சன்ஸ் பங்குச்சந்தையில் பட்டிலிட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
இப்பிரச்சனையை திறம்பட கையாள உடனடியாக அதிகாரத்திற்கு வர சந்திரசேகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. டாடா குழுமம் இதில் தோல்வி அடைந்தால் டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டிய கட்டாயம் உருவாகும்.


Click it and Unblock the Notifications
