கொரோனா பாதிப்பால் இந்தியாவின் விமானச் சேவைத் துறை அதிகளவில் பாதித்த நிலையில், நாட்டின் முன்னணி பட்ஜெட் விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றான ஏர்எசியா அதிகளவிலான வர்த்தகத்தையும் வருவாயும் இழந்து நிற்கிறது. இந்நிலையில் ஏர்ஏசியா நிறுவனம் வர்த்தக வளரச்சிக்காகப் புதிய நிதியை முதலீடு செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மலேசியாவின் முன்னணி பட்ஜெட் விமானச் சேவை நிறுவனமாகத் திகழும் ஏர்ஏசியா, இந்தியாவில் டாடா குழுமத்துடனான கூட்டணியில் விமானச் சேவை அளித்து வருகிறது. இந்தக் கூட்டணி நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளை டாடா குழுமத்தின் நிர்வாக நிறுவனமான டாடா சன்ஸ் வைத்துள்ளது. மீதமுள்ள 49 சதவீத பங்குகளை ஏர் ஏசியா வைத்துள்ளது.
இந்த 49 சதவீத பங்குகளை வாங்கவே தற்போது டாடா நிர்வாகம் மலேசிய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
காலாண்டு முடிவுகள்
கொரோன பாதிப்பால் மிகவும் மோசமான வர்த்தகத்தை எதிர்கொண்டுள்ள ஏர்ஏசியா இந்தக் காலாண்டில் மோசமான வருவாய் அளவீட்டைப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில் ஏர்ஏசியா நிர்வாகம் வர்த்தகத்தை மீட்க வேண்டும் எனத் திட்டமிட்டு மலேசியாவிற்கு வெளியில் இருக்கும் வர்த்தகத்தில் பங்கு விற்பனை வாயிலாகவும், கடன் வாயிலாகவும் சுமார் 600 மில்லியன் டாலர் அளவிலான தொகையைத் திரட்ட முடிவு செய்துள்ளது.
டோனி பெர்னாண்டஸ்
ஏர்ஏசியா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான டோனி பெர்னாண்டஸ் சில மாதங்களுக்கு முன்பு, இந்தியா வர்த்தகம் வெளிச் சந்தை தான். ஒரு நாள் வெளியேற வேண்டிய நிலை வரும் என
இதுமட்டும் அல்லாமல் ஏர்ஏசியா தற்போதைய கடன் மற்றும் நிலுவைத் தொகையில் வர்த்தகம் செய்தால் ஏர்ஏசியாவின் நிதி நிலை மிகவும் மோசமான நிலையை அடையும் என EY தெரிவித்தது.
முதலீடு
ஏர்ஏசியாவின் நிதி நெருக்கடியின் காரணமாக இந்திய வர்த்தகத்தில் தொடர்ந்து முதலீடு செய்ய முடியாத நிலையில் தள்ளப்பட்டு உள்ளது. இதனால் டாடா குழுமம் ஏர்ஏசியாவின் கடன் சுமையைக் குறைக்கும் நோக்கில், டாடா சன்ஸ் கூட்டணி நிறுவனத்தில் இருக்கும் ஏர்ஏசியா பங்குகளை வாங்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சேவை ரத்து
மலேசிய நிறுவனமான ஏர்ஏசியா இந்தியாவில் தனது சேவையை நிறுத்தியுள்ளது என மத்திய விமானத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாகவே டாடா சன்ஸ், கூட்டணி நிறுவனத்தில் இருக்கும் 49 சதவீத பங்குகளை வாங்க பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications