சாதிப்பதற்கு வயதோ, அனுபவமோ முக்கியமில்லை. மனஉறுதி, செயல்திறனுக்கான அர்ப்பணிப்பு, பிறருக்கான பொறுப்பு, புதுமையான தலைமை மற்றும் விடா முயற்சி ஆகியவை இருந்தாலே போதும் சாதித்து விடலாம். அதற்கு முன்னுதாரணமாக விளங்குபவர் அவனி தாவ்தா.
டாடா குழுமத்தின் இளம் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பெயர் பெற்றவர். டாடா ஸ்டார்பகஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான இவர் தற்போது ரூ.2,602 கோடி மதிப்பிலான மகிந்திரா லாஜிஸ்டிக்ஸின் சுயாதீன இயக்குனராக உயர்ந்துள்ளார். இவரது கணவர் விஷால் ஒரு தொழிலதிபர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் அவனி தாவ்தா. இவர் தனது பள்ளி படிப்பை முடித்தவுடன், புகழ் பெற்ற எச்.ஆர். வணிகம் மற்றும் பொருளாதார கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். வணிகத்தின் மீதான ஆர்வம் காரணமாக,நர்சி மோஞ்சி இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸில் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
பின்பு 2002ல் மதிப்பிற்குரிய டாடா நிர்வாக சேவைகளுக்கு (டி.ஏ.எஸ்.) விண்ணப்பித்தார். இதன் மூலம் வணிக உலகில் தனது முதல் அடியை எடுத்து வைத்தார். தாஜ் ஹோட்டல்ஸ் என பிரபலமாக அறியப்படும் இந்தியன் ஹோட்டல் நிறுவனம் மற்றும் இன்பினிட்டி ரீடெய்ல் லிமிடெட் ஆகியவற்றில் பணிபுரியும் போது அவர் அதிக அனுபவம் மற்றும் வர்த்தக அறிவையும் பெற்றார்.
அவருக்கு டாடா குழுமத்தின் அர்ப்பணிப்புள்ள ஊழியரான ஆர்.கே. கிருஷ்ண குமார் வழிகாட்டினார். அவனியின் ஆற்றல் மற்றும் விதிவிலக்கான குணங்களால் ஈர்க்கப்பட்ட கிருஷ்ண குமார், டாடா குளோபல் பெவரேஜஸ் லிமிடெட் மற்றும் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனங்களுக்கு இடையேயான முக்கியமான ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்கு தனிப்பட்ட முறையில் தவனி தாவ்தாவை தேர்ந்தெடுத்தார்.
இதனையடுத்து தனது 33 வயதில் அவர் டாடா ஸ்டார்பக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். மேலும் டாடா குழுமத்தின் இளம் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பெருமையும் பெற்றார். இது அவரது புகழில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
டாடா ஸ்டார்பக்ஸ் தொடங்கிய 3 ஆண்டுகளில் 6 நகரங்களில் 85க்கும் மேற்பட்ட ஸ்டோர்கள் தொடங்கப்பட்டது.ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் வருவாய் கடந்த நிதியாண்டில் ரூ.1,000 கோடி கடந்தது குறி்ப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சில ஆண்டுகள் பணியாற்றினார்.
பின்னர் 2016ல் அந்த வேலையிலிருந்து விலகி கோத்ரேஜ் நேச்சர்ஸ் பாஸ்கெட் லிமிடெட் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக பணியாற்றினார். தற்போது அவனி தாவ்தா பிரையன் அட்வைசரி நெட்வார்க் நிறுவனத்தின் யுக்தி ஆலோசகராகவும், மகிந்திரா லாஜிஸ்டிக்ஸின் சுயாதீன இயக்குனராகவும் பணியாற்றுகிறார். மகிந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.2,602 கோடியாகும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications