டாடா குழுமம், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க மாபெரும் திட்டத்தைத் தமிழ்நாட்டை நம்பி தீட்டியுள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முக்கிய இடத்தை வகிக்கும் தமிழ்நாட்டிற்குப் புதிய பலம் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ஏற்கனவே பாக்ஸ்கான், பெகாட்ரான் எனப் பல நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் உற்பத்தியைத் தீவிரமாகச் செய்து வரும் வேளையில், டாடா குழுமம் தனது ஆட்டத்தை ஓசூரில் துவங்கியது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஐபோன்-களுக்கான கேசிங் அமைப்பை உருவாக்க டாடா எலக்ட்ரானிக்ஸ் என்ற பெயரில் மாபெரும் தொழிற்சாலையைக் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கியத் தொழில் நகரமான ஓசூரில் அமைத்து இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
இந்த நிலையில் டாடா குழுமம் ஓசூர் தொழிற்சாலையை நாட்டின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலையாக மாற்ற முடிவு செய்துள்ளது. ஏற்கனவே விரிவாக்க பணிகளை அறிவித்த டாடா குழுமம் ஓசூர் தொழிற்சாலையை சென்னையில் இருக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலையை காட்டிலும் மிகப்பெரிய தொழிற்சாலையாக மாற்ற திட்டம் தீட்டியுள்ளது.
டாடா குழுமம் தற்போது ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் 20 அசெம்பிளி லைன்கள் அமைக்கத் திட்டம் தீட்டியுள்ளது, இதன் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 50,000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த உள்ளது. மேலும் அடுத்த 12-18 மாதங்களில் புதிய அசெம்பிளி லைன்கள் அமைக்கப்பட்டுச் செயல்பாடு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விரிவாக்கம் மூலம் டாடா எலக்ட்ரானிக்ஸ் வெளிநாட்டு உதிரிபாகங்களை நம்பி இனி ஐபோன் தயாரிக்கும் நிலை குறையும், கேசிங் முதல் பல்வேறு உதிரிபாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளது.
தற்போது டாடா குழுமம் கர்நாடகாவில் உள்ள விஸ்ட்ரான் கார்ப்பரேஷனின் ஐபோன் உற்பத்தி தொழிற்சாலையை கைப்பற்றியதன் மூலம் ஐபோன் தயாரிக்கும் முதல் இந்திய நிறுவனமாக டாடா உருவெடுத்துள்ளது.
சீனாவைத் தாண்டி ஆப்பிள் தனது உற்பத்தியை உலக நாடுகளுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தில் டாடா முக்கியப் பங்கு வகுக்கிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆப்பிள் மற்றும் அதன் சப்ளையர்கள் அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் ஆண்டுதோறும் 50 மில்லியனுக்கும் அதிகமான ஐபோன்களை உற்பத்தி செய்யத் தயாராகி வருகின்றனர்.
இந்தியாவில் தற்போது டாடா குழுமம், பாக்ஸ்கான், பெக்ட்ரான் ஆகிய நிறுவனங்கள் சுமார் 7 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன் தயாரித்து இந்தியாவிலும், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து விற்பனை செய்ய உள்ளது. மேலும் ஒட்டுமொத்த உற்பத்தியில் இந்தியா தற்போது 7 சதவீதம் பங்கீட்டை வகிக்கிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications