டாடா சன்ஸ் நிர்வாகத்தில் மூன்றாவது உறுப்பினரை நியமிப்பது குறித்து முடிவு செய்ய இன்று டாடா டிரஸ்ட் நிர்வாகம் முக்கிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. டாடா டிரஸ்ட் தலைவர் நோயல் டாடா இந்த பதவிக்கு வலுவான போட்டியாளராக உள்ளார், இதேவேளையில் இன்று நோயல் டாடா ட்ரஸ்டி நாமினி டைரெக்டராகவும் நியமிக்கப்படலாம்.
டாடா சன்ஸ் என்பது டாடா குழுமத்தில் இருக்கும் 165 நிறுவனங்களுக்குமான ஒரு ஹோல்டிங் நிறுவனம். இதை தற்போது என்.சந்திரசேகரன் தலைமையிலான இயங்கி வருகிறது, டாடா குழுமத்தின் இயக்கத்திற்கு டாடா சன்ஸ் தலையாய பொறுப்பு வகிக்கிறது.

இந்த நிலையில் ரத்தன் டாடா மறைவிற்குப் பின்பு அவர் வகித்த அனைத்து பதவிகளுக்கும், பொறுப்புகளும் மாற்று நபரை நியமிக்க வேண்டும். அந்த வகையில் டாடா சன்ஸ் நிர்வாகத்தில் டாடா டிரஸ்ட் சார்ப்பில் முக்கிய உறுப்பினராக இருந்த ரத்தன் டாடா மறைந்த நிலையில், இவரிடத்தில் டாடா டிரஸ்ட் சார்பில் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
தற்போது டாடா டிரஸ்ட் நிர்வாக தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்ட நிலையில் டாடா சன்ஸ் நிர்வாக உறுப்பினர் பதவியும் நோயல் டாடா எடுத்துக்கொள்ள வாய்ப்பு அதிகம். இல்லையெனில் நோயல் டாடா தனது வாரிசுகள் யாரேனும் ஒருவரையும் நியமிக்கலாம் என பேச்சு அடிப்படுகிறது.
டாடா சன்ஸ் தலைவர் பதவிக்கு முதலில் போட்டிப்போட்டவர் நோயல் டாடா, ஆனால் ரத்தன் டாடா இவருக்கு பதவியை கொடுக்காமல் சைரஸ் மிஸ்திரிக்கு கொடுத்தார். சைரஸ் மிஸ்திரி-க்கும் டாடா நிர்வாகத்திற்கும் பிரச்சனை ஏற்படவே ரத்தன் டாடா மீண்டும் தலைவர் பதவியை ஏற்றார்.
இதன் பின்பு ரத்தன் டாடா ஓய்வு பெற்ற பின்பு டாடா சன்ஸ் தலைவர் பதவியில் யார் அமரப்போகிறார்கள் என்ற பெரும் கேள்விக்கு அதிரடியாக முடிவு எடுக்கப்பட்டது. பொதுவாக இத்தகைய பெரும் பதவிகளில் குடும்ப உறுப்பினர்களை நியமிப்பது அல்லது அதிக பங்குகளை வைத்துள்ளவரை நியமிப்பது வழக்கம்.
ஆனால் ரத்தன் டாடா, டாடா குழுமத்திற்கு வேகம் வேண்டும் என்ற முடிவுடன் அப்போது டிசிஎஸ் சிஇஓ-வாக இருந்த என்.சந்திரசேகரனை நியமித்தார் ரத்தன் டாடா. இவருடைய முடிவு தவறாகவில்லை, சந்திரசேகரன் நிர்வாக பொறுப்பை ஏற்ற பின்பு மிகப்பெரிய வளர்ச்சியை பதிவு செய்தது டாடா குழுமம்.
இந்த நிலையில் டாடா சன்ஸ் நிர்வாகத்தில் நோயல் டாடா நுழையும் ஒரு வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. இதன் மூலம் நோயல் டாடா-வுக்கும், என்.சந்திரசேகரன்-க்கும் பிரச்சனை வெடிக்குமான என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது டாடா குழுமத்தின் வளர்ச்சி விகிதத்தைப் பார்க்கும் போது தெரிகிறது.
ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸில் டாடா ட்ரஸ்ட் 66% பங்குகளை வைத்திருக்கிறது, இதில் சர் ரத்தன் டாடா ட்ரஸ்ட் மற்றும் சர் டோரபஜி டாடா ட்ரஸ்ட் முக்கிய ட்ரஸ்ட்கள் ஆகும். டாடா சன்ஸின் விதிகள் படி, அதன் இயக்குநர்களில் மூன்றில் ஒரு பகுதியை டாடா ட்ரஸ்ட் நியமிக்க அதிகாரம் உள்ளது. இதன் அடிப்படையில் தான் தற்போது டாடா ட்ரஸ்ட் முக்கிய கூட்டம் நடத்துகிறது.
டாடா சன்ஸ் அடுத்த சில நாட்களில் அதன் நிர்வாகத்தில் புதிய நியமனங்களை மேற்கொள்ளலாம். தற்போது 70 வயதான பாஸ்கர் பட் விலக உள்ளார், இந்த இறுதி கூட்டத்தைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இயக்குநரகத்தில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவரோடு, ஜாகுவார் லேண்ட் ரோவர் இயக்குநரான 69 வயதான ரால்ஃப் ஸ்பெத் விரைவில் விலகுவார் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு பேரின் இடத்தில் புதிய நபர்களை நியமிக்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications