இந்திய சந்தையில் தற்போது ஐபிஓ மிகவும் பிரபலமாக இருக்கும் காரணத்தால் டெக் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மட்டும் அனைத்துத் துறை சார்ந்த நிறுவனங்களும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில் ஜூலை 16ஆம் தேதி ஐபிஓ வெளியிட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு பெற்று இன்று பட்டியலிடப்பட்ட தத்வா சின்தான் பார்மா கெம் நிறுவனம் முதல் நாளிலேயே 100 சதவீத லாபத்தை ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு வாரிக்கொடுத்துள்ளது.

ஜூலை 16ஆம் தேதி ஐபிஓ துவங்கிய தத்வா சின்தான் பார்மா கெம் நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் ஒரு பங்கு 1083 ரூபாய் விலையில், 500 கோடி ரூபாய் முதலீட்டுக்கு சுமார் 180.36 மடங்கு முதலீடு செய்து பிரம்மிக்க வைத்தனர்.
இந்நிலையில் இன்று காலை மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடும் போது தத்வா சின்தான் பார்மா கெம் நிறுவனப் பங்குகள் 2111 ரூபாய் விலையில் பட்டியலிடப்பட்டு அதிகப்படியாக 2,486 ரூபாய் வரையில் உயர்ந்தது.
வர்த்தக முடிவில் ஒரு பங்கு 2,310.25 ரூபாய் அளவிற்கு உயர்ந்து ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு 113.32 சதவீதம் வரையில் உயர்வில் முடிவடைந்துள்ளது. ஒரு ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும் சொல்லுங்க.
சமீபத்தில் ஐபிஓ வெளியிட்டு மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சோமேட்டோ நிறுவனப் பங்குகள் இன்று 7.67 சதவீதம் வரையில் உயர்ந்து 141.70 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications