தேசிய பென்ஷன் திட்டம் என்பது விருப்பப்பட்டு முதலீடு செய்யும் பென்ஷன் திட்டமாகும். இதில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் தங்களது ஓய்வுப் பலன்களுக்காக முதலீடு செய்யலாம். 18 முதல் 60 வயது வரையிலான யாரும் தேசிய பென்ஷன் திட்ட அக்கவுன்ட்டை திறக்கலாம்.
இந்த தேசிய பென்ஷன் திட்டம் தேசிய பென்ஷன் சிஸ்டம் என்றும் அழைக்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் மக்களுக்காக 2009 ஆம் ஆண்டு முதல் அனுமதி வழங்கப்பட்டது. விருப்பப்பட்டு முதலீடு செய்யப்படும் இந்த தேசிய பென்ஷன் திட்டம் தனி நபர்களுக்கான நீண்ட கால சேமிப்பாகவும் ஓய்வுக்குப் பின்னர் தேவைப்படும் நிதித் தேவைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்தத் திட்டத்தை பென்ஷன் பண்டு ரெகுலேட்டரி டெவலப்மென்ட் அத்தாரிட்டி என்ற அமைப்பு வழிநடத்துகிறது. அரசு, தனியார் மற்றும் அமைப்பு சாரா துறையைச் சேர்ந்த ஊழியர்கள் இந்த பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து முதலீடு செய்யலாம். 18 முதல் 60 வயதான யாரும் இந்த தேசிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து முதலீடு செய்து பலன்களைப் பெறலாம்.
வழக்கமாக அரசு அலுவலகங்கள், தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்தில் இருந்து தொழிலாளர் பிராவிடண்ட் பண்டுக்கான தொகை பிடித்தம் செய்யப்படும். 20 வருடங்கள் பிஎப் பிடித்தம் செய்யப்பட்டால் அதன்மூலம் அந்த ஊழியருக்கு ஓய்வூதியப் பலன்களும் கிடைக்கும்.
அது தவிர பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் பிஎப்பில் இருந்து ஒரு பெரிய தொகை கிடைக்கும். பிஎப் கணக்கில் செலுத்தப்படும் பணத்துக்கு ஆண்டுக்கு வட்டியும் வரும். இடையில் கல்விக் கட்டணம் மருத்துவச் செலவுகள் போன்ற அவசரத் தேவைக்காக பிஎப்பில் இருந்து
பணம் எடுத்துக் கொள்ளலாம்.
பணி ஓய்வுக்குப் பின் இதுபோன்ற பென்ஷன் திட்டங்கள் மூலம் பாதுகாப்பான நிதியை பெறலாம். எனவே வேலை செய்யும் ஊழியர்கள் கட்டாயம் ஏதாவது ஒரு பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து முதலீடு செய்து வந்தால் அவர்களது பணி ஓய்வுக்குப் பின் நிதி பாதுகாப்பு கிடைக்கும்.
தேசிய பென்ஷன் திட்டம் மக்களுக்கு மிகவும் பலன் தரக்கூடிய திட்டமாகும்.
More From GoodReturns

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications