கொரோனா தொற்றுக் காரணமாகப் பல கோடி மக்கள் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் நிறுவனங்கள் முதல் தனிநபர் வரையில் பல்வேறு வகையில் உதவி செய்தனர்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பலருக்கு திடீர் பணவரவு வந்துள்ளது. இதனால் வருமான வரிக் கணக்கில் புதிய பிரச்சனை உருவான நிலையில் மத்திய நிதியமைச்சகம் வருமான வரிக் கணக்கீட்டில் கொரோனா நிதியுதவிக்காகச் சிறப்புச் சலுகை வழங்கப்பட்டு உள்ளது. இப்புதிய சலுகை மக்களுக்குப் பெரும் நிதிச் சுமையைக் குறைக்க உள்ளது.
சரி மத்திய நிதியமைச்சகம் அப்படி என்ன சலுகையை அளித்துள்ளது, வாங்கப் பார்ப்போம்.
கொரோனா சிகிச்சைக்கு நிதியுதவி
2019-20 நிதியாண்டு மற்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் கொரோனா சிகிச்சைக்காக நிறுவனங்கள் தனது ஊழியர்களுக்கும், ஒரு நபர் மற்றொரு நபருக்கு நிதியுதவி செய்திருந்தால் இந்தத் தொகையைப் பெறும் நபர் மற்றும் ஊழியரிடம் இருந்து வருமான வரி வசூலிக்கப்படாது.
Ex-Gratia தொகைக்கு வரி ரத்து
இதேபோல் கொரோனா மூலம் யாரேனும் இறந்திருந்து, நிறுவனமோ அல்லது தனிநபரோ இறந்தவரின் குடும்பத்திற்கு உதவும் வகையில் Ex-Gratia நிதியுதவி செய்திருந்தால் அதற்கும் வருமான வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் ExGratia தொகை அளவீட்டை 10 லட்சம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளது.
வீட்டு மனை முதலீடு
வீட்டு மனை முதலீட்டில் கிடைக்கும் வரிச் சலுகையை 3 மாதம் நீட்டித்துள்ளது மத்திய நிதியமைச்சகம். இதன் மூலம் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலத்திற்கு வீட்டு மனையில் செய்த முதலீட்டுக்குப் பிரிவு 54 மற்றும் பிரிவு 54GB கீழ் வரிச் சலுகையைப் பெற முடியும்.
வட்டியில்லா பேமெண்ட்
இதேபோல் வருமான வரி தாக்கல் இருக்கும் பிரச்சனைகளைக் களைய vivad se vishwas திட்டத்தின் கீழ் வட்டி இல்லாமல் பணம் செலுத்த 2 மாத காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 31 வரையில் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

தீவிரமடையும் சிலிண்டர் தட்டுப்பாடு: அவசர ஆலோசனை நடத்திய மோடி.. கமிட்டி அமைத்த மத்திய அரசு..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications