டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் நேற்று வெளியிட்ட 2025-26 நிதியாண்டுக்கான செப்டம்பர் காலாண்டு முடிவுகளில் நிதி விபரங்களை வெளியிட்டதை தாண்டி பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் அனைவரும் கவனிக்கூடிய வகையில் இருந்தது 2 விஷயம்.
1. டிசிஎஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கையில் ஏற்பட்ட பெரும் சரிவு.
2. ஐடி ஊழியர்களை வெளியேற்றப்பட்ட நிலையில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட severance pay மூலம் ஏற்பட்ட மிகப்பெரிய செலவு.

டிசிஎஸ் நிறுவனத்தில் 2012 ஆம் ஆண்டு ஊழியர்களின் செயல்திறன் காரணமாக 2500 பேரை பணியில் இருந்து நீக்கியது, இதை தொடர்ந்து 2வது முறையாக அதிலும் அதிக எண்ணிக்கையில் ஜூலை மாதம் 12,260 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதன் மூலம் செப்டம்பர் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 19,755 ஊழியர்கள் குறைந்துள்ளனர்.
இப்படி பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 6 முதல் 2 வருடம் வரையிலான severance pay கொடுக்கப்பட்ட நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் ஒரு முறை செலவுகள் ரூ.1,135 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த ஓன் டைம் ரீஸ்டக்சர் செலவில் பெரும் பகுதி பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கான செலவு தான். இதன் மூலம் டிசஎஸ் நிர்வாகம் தொடர்ந்து நிறுவனத்தில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யும் திட்டத்தையும், நிர்வாக முறையை மாற்றும் பணிகளை செய்யும்.
இந்த ஓன் டைம் ரீஸ்டக்சர் செலவு மூலம் TCS-ன் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம், ரூ.12,075 கோடியாக பதிவாகியுள்ளது. இதேவேளையில் TCS-ன் இந்த காலாண்டு ஆப்ரேட்டிங் வருவாய் ரூ.65,799 கோடியாக பதிவாகியுள்ளது, இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 3.7 சதவீதம் உயர்வாகும். மேலும், நிலையான நாணய மதிப்பு அடிப்படையில் டிசிஎஸ்-ன் வருவாய் வளர்ச்சி 0.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

டிசிஎஸ்-ன் பணிநீக்கத்தை எதிர்த்து கடந்த சில மாதங்களாக, அகில இந்திய ஐடி மற்றும் ஐடிஸ் ஊழியர் சங்கம் (AIITEU), ஐடி ஊழியர் மன்றம் (FITE), மற்றும் ஐடி மற்றும் ஐடிஸ் ஊழியர் ஒன்றியம் (UNITE) போன்ற சங்கங்கள், ஐடி ஊழியர்களை கட்டாயப்படுத்தி பணியில் இருந்து விலக வைப்பதாகவும், அதிகளவில் ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாகவும் குற்றம்சாட்டி வருகிறது.
இது தொடர்பாக மத்திய மாநில ஊழியர்கள் அமைச்சகங்கள் முதல் பல இடத்தில் புகார் அளித்துள்ளது. ஆயினும் டிசிஎஸ் 12000க்கும் அதிகமான ஊழியர்களை இக்காலாண்டில் குறைத்துள்ளது. மேலும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவருக்கும் 3 மாதம் வேறு பணியில் சேர்வதற்கான உதவிகளை செய்ய முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications