இந்தியா மட்டும் அல்லாமல் உலகளாவிய ஐடி சேவை துறையும் தற்போது எங்கும் AI எதிலும் AI என்ற அளவில் தான் தனது வர்த்தகத்தை நகர்த்தி வருகிறது. ஐடி சேவை நிறுவனங்கள் புதிதாக AI துறையில் வர்த்தகத்தை தேடி பிடிப்பதை ஒரு பக்கம் பிசியாக செய்துக்கொண்டு இருந்தாலும் மறுப்பக்கம் தற்போது இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு கூட்டு சேவையாக AI துறையில் சேவை அளிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் AI துறைக்கு மாற்றும் பொருட்டு இத்துறையில் திறன் வாய்ந்த ஊழியர்கள் சந்தையில் இல்லாத காரணத்தால் டிசிஎஸ் முக்கிய முடிவை எடுத்துள்ளது. OPENAI நிறுவனத்தின் பெரும் தொகையை முதலீடு செய்து தன்னுடைய அனைத்து சேவைகளிலும் AI உதவிகளை புகுத்தியுள்ளது மைக்ரோசாப்ட். இதில் Azure OpenAI-ம் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Azure OpenAI பிரிவில் போதுமான திறன்வாய்ந்த ஊழியர்களை உருவாக்கும் பொருட்டு டிசிஎஸ் மற்றும் மைக்ரோசாப்ட் இணைந்து சுமார் 25000 பேருக்கு Azure OpenAI-யில் திறன்வாய்ந்த ஊழியர்களாக உருவாக்கும் பயிற்சியை அளிக்க உள்ளது. இதவேளையில் டிசிஎஸ் மைக்ரோசாப்ட் கிளவுட் வாயிலாக இயக்கும் புதிய ஜெனரேட்டிவ் AI சேவையை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தில் இருக்கும் 6 லட்சம் ஊழியர்களில் 50000 பேருக்கு AI துறையில் பயிற்சி பெற்ற அதிகாரிகளாக உள்ளனர். இது மட்டும் அல்லாமல் மைக்ரோசாப்ட்-ன் AI கவுன்சில் கூட்டத்தில் டிசிஎஸ் நிறுவனம் உறுப்பினராக உள்ளது. இதன் மூலம் டிசிஎஸ் நிறுவனத்தில் 25000 ஊழியர்கள் வேகமாக வளரும் AI துறையில் பயிற்சி பெரும் வாய்ப்பு கிடைக்க உள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களில் தங்களுடைய டெக்னாலஜி வாடிக்கையாளர்கள் பெரிய திட்டங்களை ரத்து செய்ததும், தற்காலிக நிறுத்தியது போன்ற நடவடிக்கைகளின் மூலம் பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இது மட்டும் அல்லாமல் இந்திய ஐடி துறை நிறுவனங்கள் தற்போது எதிர்கொண்டு வரும் வர்த்தக இழப்பு காரணமாக கடுமையான சவால்களையும், வருமானத்தில் நிலையற்ற தன்மையும் உருவாகி வருகிறது. இது நேரடியாகவும், மறைமுகமாகவும் ஊழியர்களை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications