கொரோனாவின் வருகைக்கு பிறகு ஊழியர்கள் பணிபுரியும் சூழலில் பெரும் மாற்றங்கள் வந்துள்ளன. குறிப்பாக ஐடி துறையில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். எனினும் தற்போது நிறுவனங்கள் அலுவலகத்திற்கு அழைக்க தொடங்கியுள்ளன.
அந்த வகையில் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனமும் வீட்டில் இருந்து பணி என்ற ஆப்சனை வழங்கி இருந்தது. தற்போது படிப்படியாக ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க தொடங்கியுள்ளது.
தற்போது மருத்துவ காரணங்களுக்காக ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரிய விரும்பினால், அவர்கள் மருத்துவ சான்றிதழை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மருத்துவ சான்றிதழ் பெறணும்
அதற்காக டிசிஎஸ்- நியமித்த உள்மருத்துவர்களிடம் சான்றிதழ் பெற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
நியமிக்கப்பட்ட மருத்துவ குழு சரிபார்த்து இந்த ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வது பொருந்துமா? என்பதை தீர்மானிக்கும் என தெரிவித்துள்ளது.
மருத்துவர்கள் பரிந்துரை
மருத்துவர்களின் பரிந்துரைபடியே, ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவர். குறைந்தபட்சம் 3 நாட்கள் அலுவலகத்திற்கு வராதவர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படுவர். ஏற்கனவே சில ஊழியர்கள் மருத்துவர்களின் அனுமதி பெற்ற பிறகு வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அலுவல் தேவையாக அலுவலகத்திற்கு வருவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
அலுவலகம் வரும் ஊழியர்கள்
டிசிஎஸ் நிறுவனம் ஒரு வாரத்தில் சில நாட்கள் அலுவலகங்களுக்கு திரும்பும்படி, நாங்கள் ஊழியர்களை ஊக்குவித்து வருகிறோம். ஏற்கனவே கணிசமான ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர் எனவும் டிசிஎஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மூன்றில் இருபங்கு
டிசிஎஸ் காலாண்டு அறிக்கையில் மொத்தம் 6,16,171 ஊழியர்கள் உள்ள நிலையில், மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் அலுவலகம் வந்து செல்கின்றனர். இவர்கள் ரோஸ்டர் அடிப்படையிலான வருகையைப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications