டிசிஎஸ் அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் கொண்டாட்டம்.. 70% ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் அதன் 70 சதவீத ஊழியர்களுக்குக் கிறிஸ்துமஸ் பண்டிகை கிப்ட் ஆக 20 சதவீத சம்பள உயர்வை வழங்கு முடிவு செய்துள்ளது.

மேலும் மீதமுள்ள டிசிஎஸ் ஊழியர்களுக்கு அவர்களின் செயல்திறன் அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் சுமார் 6 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிறுவன ஊழியர்களின் சம்பளத்தில் 10 முதல் 20 சதவீதம் வரையிலான தொகை வேரியபிள் பே ஊதியத்தைச் சார்ந்துள்ளது. 2022 நிதியாண்டில் 4 லட்சம் ஊழியர்களுக்கு 100% வேரியபிள் பே தொகையை வழங்க டிசிஎஸ் திட்டமிட்டு இருந்தது.

இந்திய ஐடி நிறுவனங்களுக்குப் பொற்காலம்.. 160 பில்லியன் டாலர் டீல்..! இந்திய ஐடி நிறுவனங்களுக்குப் பொற்காலம்.. 160 பில்லியன் டாலர் டீல்..!

 டிசிஎஸ்

டிசிஎஸ்

தற்போது, டிசிஎஸ் தனது ஊழியர்களுக்கு 100% வேரியபிள் பே தொகையை அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. செப்டம்பர் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 8% உயர்ந்து, 10,431 கோடி ரூபாயை பெற்றது, இதன் மூலம் முதல் முறையாக 10000 கோடி ரூபாய் அளவீட்டை டிசிஎஸ் எட்டியது.

 மிலிந்த் லக்காட்

மிலிந்த் லக்காட்

டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனித வள அதிகாரி மிலிந்த் லக்காட் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட போது 70 சதவீத ஊழியர்களுக்கு 100 சதவீதம் வோரியபிள் பே வழங்க உள்ளோம். மீதமுள்ள 30 சதவீத ஊழியர்களுக்கு அவர்களின் செயல்திறன் அடிப்படையில் வேரியபிள் பே ஊதியம் வழங்கப்படும். இது நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டுக்கானது (ஜூலை-செப்டம்பர்) என விளக்கம் கொடுத்தார்.

விப்ரோ மற்றும் இன்போசிஸ்

விப்ரோ மற்றும் இன்போசிஸ்


டிசிஎஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான விப்ரோ மற்றும் இன்போசிஸ் ஆகியவை முதல் காலாண்டில் டிசிஎஸ் செய்ததைப் போலவே தங்கள் ஊழியர்களுக்கான வேரியபிள் பே தொகையைக் குறைத்தது.

 100 சதவீதம் வேரியபிள் பே

100 சதவீதம் வேரியபிள் பே

இதன் பின்பு அனைத்து நிறுவனங்களும் 100 சதவீதம் வேரியபிள் பே தொகை அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவித்தது. இந்த நிலையில் தற்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் அதன் 70% ஊழியர்களுக்குக் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி 20 சதவீத சம்பள உயர்வை வழங்குகிறது.

616,171 ஊழியர்கள்

616,171 ஊழியர்கள்

செப்டம்பர் 30, 2022 இல் டிசிஎஸ் தனது காலாண்டு முடிவுகளின் தரவு படி இந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 616,171 ஆக இருந்தது, இக்காலாண்டில் மட்டும் புதிதாகச் சுமார் 9,840 ஊழியர்களைக் கூடுதலாகச் சேர்த்தது.

157 நாடுகளை

157 நாடுகளை

டிசிஎஸ் நிறுவனத்தில் சுமார் 157 நாடுகளைச் சேர்ந்த மக்கள் பணியாற்றி வருகிறார்கள். மேலும் மொத்த ஊழியர்களில் சுமார் 35.7 சதவீதம் பேர் பெண்களை முழு நேர ஊழியர்களாகக் கொண்டு உள்ளது.

அட்ரிஷன் விகிதம்

அட்ரிஷன் விகிதம்

செப்டம்பர் 2022 காலாண்டில் இந்திய ஐடி சேவை நிறுவனங்களில் அதன் அட்ரிஷன் விகிதம் 21.5 சதவீதமாக இருந்தது, இது முந்தைய காலாண்டில் பதிவு செய்யப்பட்ட 19.7 சதவீதத்தை விட அதிகமான அளவு என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் காலாண்டில் இதே அட்ரிஷன் விகிதம் 17.4 சதவீதமாக இருந்தது.

விப்ரோ அறிவித்த குட் நியூஸ்.. ஐடி ஊழியர்கள் செம ஹேப்பி..! விப்ரோ அறிவித்த குட் நியூஸ்.. ஐடி ஊழியர்கள் செம ஹேப்பி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS big Announcement: 20% Salary Hike For 70% Of Employees as christmas gift

TCS big Announcement: 20% Salary Hike For 70% Of Employees as Christmas gift
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X