டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) 2024-25 நிதியாண்டின் நான்காவது காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. மார்ச் காலாண்டில் நிகர லாபம் 1.7 சதவீதம் குறைந்து ரூ.12,224 கோடியாக உள்ளது, ஆனால் ஆப்ரேட்டிங் வருவாய் 5.3% அதிகரித்து ரூ.64,479 கோடியை எட்டியுள்ளது. வருவாய் அதிகரித்துக் காணப்பட்டாலும் லாபம் குறைந்துள்ளது முதலீட்டாளர்களின் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையைச் சமாளிக்க முதலீட்டாளர்களைக் கவர முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிர்வாகம் தனது பங்குதாரர்களுக்கு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான இறுதி டிவிடெண்ட் ஆக ஒரு பங்குக்கு 30 ரூபாய் வழங்கப் பரிந்துரைத்துள்ளது. இந்த டிவிடெண்ட், நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்குதாரர்களின் ஒப்புதலுக்குப் பின்பு உறுதி செய்யப்படும்.

இதன் மூலம் ஒரு நாள் விடுமுறைக்குப் பின் திறக்கப்படும் பங்குச்சந்தையில் ஏற்படும் சரிவைக் கட்டுப்படுத்த முடியும். இதேபோல் இந்த டிவிடென்ட் தொகை மூலம் டாடா சன்ஸ் நிர்வாகம் பெரும் தொகையைப் பெற உள்ளது.
மேலும், டிசிஎஸ் நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், புதிய ஒப்பந்தங்கள் மூலம் 12.2 பில்லியன் டாலர் மதிப்பிலான வருவாயை ஈட்டியுள்ளது. இது அந்நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு காலாண்டில் பெறப்பட்ட அதிகபட்ச ஒப்பந்த மதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டிசிஎஸ்-ன் புக்-டு-பில் விகிதம் வலுவாக 1.6 அளவில் உயர்ந்துள்ளது.
இதோடு முழு நிதியாண்டிற்கான மொத்த புதிய ஒப்பந்த மதிப்பு 39.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது எனவும் டிசிஎஸ் நிர்வாகம் தனது நிதியியல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான கே. கிருதிவாசன் இந்த சாதனை குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
கே. கிருதிவாசன் கூறுகையில், "வருடாந்திர வருவாயில் 30 பில்லியன் டாலர் என்ற மைல்கல்லை எட்டியதுடன், தொடர்ந்து இரண்டாவது காலாண்டிலும் அதிகப்படியான ஆர்டர்களை பெற்றுள்ள மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டில் டிசிஎஸ் நிர்வாகம் தனது பங்குதாரர்களுக்கு 44,962 கோடி ரூபாய் அளவிலான டிவிடெண்ட் தொகையை வழங்கியுள்ளது. கடந்த பன்னிரண்டு மாதங்களில் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாளர்கள் வெளியேற்ற விகிதம் 13.3% ஆக பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்திற்கு எப்போதும் போல வட அமெரிக்கா வணிகம் நான்காவது காலாண்டில் மொத்த வருவாயில் 48.2% பங்களித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இருந்த 50% பங்களிப்பை விட 1.9 சதவீத புள்ளிகள் குறைவு ஆகும். இதை தொடர்ந்து பிரிட்டன் வணிகம் 1.2% வருடாந்திர வளர்ச்சி கண்டு, நிறுவனத்தின் மொத்த வணிகத்தில் 16.8% பங்கீட்டை கொண்டுள்ளது.
அனைத்தையும் விட முக்கியமாக டிசிஎஸ் நிறுவனத்தின் இந்திய வணிகம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை இக்காலாண்டில் பதிவு செய்து, 33% உயர்ந்து மொத்த வருவாயில் 8.4% பங்களித்தது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications