டிசிஎஸ் ஊழியர்கள் குத்தாட்டம்!! சம்பளம் மட்டுமில்லாம பெரிய பரிசும் வரப்போதுனா சும்மாவா!!

ஊழியர்கள் பணி நீக்கம், கட்டாய ராஜினாமா என அடுத்தடுத்து ஊழியர்களுக்கு அதிர்ச்சியை அளித்து வந்த டிசிஎஸ் நிறுவனம் முதன்முறையாக ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தியை வழங்கி இருக்கிறது. அதுவும் மீட் - டூ- சீனியர் லெவல் ஊழியர்களுக்கு டிசிஎஸ் நிறுவனம் மிகப்பெரிய ஒரு ஜாக்பாட்டை தந்திருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக டிசிஎஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் டிசிஎஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 2% பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. இதனை அடுத்து திடீர் பணிநீக்கம், கட்டாய ராஜினாமா என கடந்த ஓராண்டு காலமாக டிசிஎஸ் நிறுவனம் பல்வேறு எதிர்மறையான காரணங்களுக்காக தொடர்ந்து செய்திகளில் இடம் பிடித்து வருகிறது.

டிசிஎஸ் ஊழியர்கள் குத்தாட்டம்!! சம்பளம் மட்டுமில்லாம பெரிய பரிசும் வரப்போதுனா சும்மாவா!!

டிசிஎஸ் நிறுவன செயல்பாடுகளுக்கு எதிராக தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்திடமும் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனம் நீண்ட காலத்துக்கு பிறகு தங்கள் ஊழியர்களுக்கு குட் நியூஸ் தந்திருக்கிறது. டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் வேரியபிள் பே அவுட்களை வழங்குகின்றன.

அதாவது நிறுவனம் ஒரு குறிப்பிட்ட இலக்கினை எட்டி விட்டது எதிர்பார்த்த அல்லது அதனை விட அதிக லாபம் ஈட்டி விட்டது, சவாலான பிராஜெக்டுகளை முடித்துவிட்டது என்பன உள்ளிட்ட காரணங்களுக்காக ஊழியர்களுக்கு வேரியபிள் பே அவுட்களை வழங்குகின்றன. சம்பளம் இல்லாமல் அத்துடன் ஒரு ஊக்க தொகை, போனஸ் என்ற வழிமுறைகளில் இது வழங்கப்படுகிறது.

அந்த வகையில் நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டிற்கான வேரியபிள் பே அவுட் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. குறிப்பாக மிட் - டூ- சீனியர் லெவல் ஊழியர்களுக்கு 80 சதவீதம் வரை வேரியபிள் பே வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறது. மணி கண்ட்ரோல் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. ஏஐ அடிப்படையிலான மாற்றங்களுக்கு டிசிஎஸ் நிறுவனம் மிக தீவிரமாக தயாராகி வரக்கூடிய சூழலில் ஊழியர்களுக்கான வேரியபிள் பே அவுட்டை இருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக டிசிஎஸ் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு 20- 50 சதவீதம் வரை மட்டுமே வேரியபிள் பே வழங்கி வந்தது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இதனை 80 சதவீதமாக உயர்த்தி ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் தந்திருக்கிறது. மூத்த நிலையில் இருக்கக்கூடிய அதாவது சீனியர் லெவல் ஊழியர்களுக்கு 40லிருந்து 80 சதவீதம் வரையும், மிட் லெவல் ஊழியர்களுக்கு 80% வரையிலும் வேரியபிள் பே வழங்கப்பட்டுள்ளது.

வேரியபிள் பே அதிகரித்துள்ளதன் மூலம் தங்களுக்கு மோசமான காலம் முடிந்து நல்ல காலம் பிறந்துவிட்டதாக ஐடி ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். டிசிஎஸ் நிறுவனம் தற்போது ஏஐ ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்துகிறது. இதுநாள் வரை ஏஐ சம்பந்தப்பட்ட 5000 ப்ராஜெக்டுகளை முடித்து இருப்பதாகவும் இதன் மூலம் 1.8 பில்லியன் டாலர்கள் வருமானம் பெற்று இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+