இந்தியாவின மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் சமீபத்தில் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது முதல் சந்தையில் முக்கிய விவாத பொருளாக மாறியுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் வர்த்தக பிரச்சனைகள் தான், இதன் எதிரொலியாக முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்துள்ளது.
இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் நிலைமை இதுதான் என அதன் டிசிஎஸ் கே கிருதிவாசன் கூறியது டிசிஸ் ஊழியர்களை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஐடி நிறுவன ஊழியர்கள், ஐடி நிறுவன முதலீட்டாளர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

டிசிஎஸ் சிஇஓ கே கிருதிவாசன் நடப்பு நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சி மிகவும் மந்தமாகவும் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருக்கும் என தெரிவித்தார். இதன் மூலம் டிசிஎஸ் நிர்வாகம் இந்த வருடம் மிகவும் மந்தமான வர்த்தக வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்யும் என கூறப்படுகிறது. முதல் 2 காலாண்டில் முடக்க நிலை வளர்ச்சியை (Muted Growth) பதிவு செய்தது.
அடுத்த 2 காலாண்டில் ஒட்டுமொத்த ஐடி சேவை துறைக்கும் சர்வதேச அளவில் மோசமான காலக்கட்டம் என்பதால் மந்தமான வளர்ச்சியை மட்டுமே டிசிஎஎஸ் எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது என கே கிருதிவாசன் தெரிவித்தார். இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனம் என்பதால் இந்நிறுவனத்தின் வளர்ச்சி தான் ஒட்டுமொத்த இந்திய ஐடி சேவை துறையின் வளர்ச்சியை பிரதிபலிக்கும்.
59 வயதான கே கிருதிவாசன் ஜூன் மாதம் தான் டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக பதவியேற்றினார். இவருடைய பதவி காலம் ஐடி துறைக்கு மிகவும் மோசமாக காலக்கட்டத்தில் இருக்கும் போது வந்துள்ளது, இதனால் யாரும் எதிர்கொள்ளாத சவால்களை ஆரம்பம் முதல் எதிர்கொண்டு வருகிறார்.
மேலும் டிசிஎஸ் வளர்ச்சி குறித்து கிருதிவாசன் கூறுகையில் முதல் அரையாண்டு மோசமான காலக்கட்டம் என சொல்லமாட்டேன், ஆனால் 2வது அரையாண்டு முதல் அரையாண்டை காட்டிலும் மோசமாக தான் இருக்கும் என தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் ஐடி சேவைக்கு அதிகப்படியான டிமாண்ட் இல்லை, ஆனால் சந்தையின் சூழ்நிலை மேம்பட்டால் நிறுத்திவைக்கப்பட்டு உள்ள திட்டங்கள் பலன் அளிக்கும் எனவும் கிருதிவாசன் ஈடி-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications