டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து அதன் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் வெளியேறுவது இத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.
ராஜேஷ் கோபிநாதன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து கே கிருதிவாசன் புதிய டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரியாக இன்று மார்ச் 16 ஆம் தேதி பெறுப்பேற்கிறார்.
கிருதிவாசன் தற்போது நிறுவனத்தின் பிரசிடென்ட் மட்டும் அல்லாமல் வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீடு (BFSI) வணிக பிரிவின் உலகளாவிய தலைவராக உள்ளார். மேலும் கிருதிவாசன் இந்நிறுவனத்தில் சுமார் 34 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.
என். சந்திசேகரன்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திசேகரன் பெறுப்பேற்ற போது டாடா குழுமத்தில் அதிகம் லாபம் ஈட்டும் நிறுவனமாக இருந்தது அவர் தலைமை வகித்த டாடா கன்சல்டனசி நிறுவனம் தான். சந்திரசேகரன் வெளியேறிய போது மிகவும் நம்பிக்கை உடன் டிசிஎஸ் சிஇஓ பதிவியை ராஜேஷ் கோபிநாதன்-க்கு கொடுத்தார்.
ராஜேஷ் கோபிநாதன்
இதை தொடர்ந்து டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் உயர்ந்து இதன் வளர்ச்சிக்கு முழு முக்கிய காரணமாக இருந்தது மட்டும் அல்லாமல், இந்திய ஐடி துறையில் டிசிஎஸ் தனது ஆதிக்கத்தை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து வலிமையுடன் டிசிஎஸ் இன்று வரையில் இயங்கி வருகிறது.
கொரோனா தொற்று காலம்
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாகிய நிலையில் ஐடி நிறுவனங்கள் என்ன செய்வது என தெரியாமல் புலம்பிக்கொண்டு இருந்த வேளையில் டிசிஎஸ் சிஇஓ-வாக ராஜேஷ் கோபிநாதன் எடுத்த முடிவுகள் அனைத்தும் பாராட்டத்தக்கது. டிசிஎஸ் நிறுவனத்தின் அறிவிப்புக்கு பின்பு தான் அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் வொர்க் ப்ரம் ஹோம் கொடுத்தது.
டிசிஎஸ் ராஜேஷ் கோபிநாதன்
ராஜேஷ் கோபிநாதன் 22 ஆண்டுகாலம் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பிறகு இந்நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார். இதில் 6 வருடம் டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ ஆக பணியாற்றியுள்ளார். ராஜேஷ் கோபிநாதன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தாலும் செப்டம்பர் மாதம் வரையில் இந்நிறுவன பணியில் இருப்பார்.
கிருதிவாசன் தலைமை
மார்ச் 16 ஆம் தேதி முதல் கிருதிவாசன் டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக பொறுப்பேற்கிறார். இதன் மூலம் டிசிஎஸ் இனி கிருதிவாசன் தலைமையில் வேகமாக வளர உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications