இந்திய ஐடி துறையின் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் கடந்த ஒரு வாரமாக மக்கள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது. கடந்த வாரம் 12000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது, அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த பிரச்சனையை சரி செய்ய மத்திய அரசு முதல் கர்நாடக அரசு வரையில் டிசிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் டிசிஎஸ் முக்கியமான செய்தியை வெளியிட்டுள்ளது.
பென்ச் ஊழியர்களையும், ஏஐ துறையில் திறன் இல்லாத மிட் லெவல், சீனியர் ஊழியர்களையும் பணியில் இருந்து நீக்குவதற்கு தயாராகி வரும் டிசிஎஸ் நிர்வாகம், ஒரு முக்கியமான வாக்குறுதியை அளித்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் சுமார் 600க்கும் மேற்பட்ட அனுபவம்வாய்ந்த ஊழியர்களுக்கு பணியில் அமர்த்துவதற்கான ஆஃபர் லெட்டரை கொடுத்துள்ள நிலையில், இவர்களுக்கு பணியில் சேர்வதற்கான நாள் அறிவிக்காமலேயே இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த 600 பேருக்கும் பணிகளை வழங்கும் என்று உறுதியளித்துள்ளது. இதை நிறுவனம் தொழிலாளர் அமைச்சகத்திற்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு, TCS-இன் ஒரு பேச்சாளர் கூறியதாவது, "TCS-லிருந்து வேலை அழைப்பு பெற்ற அனைவரும் சேர்க்கப்படுவார்கள். சேர்க்கை தேதிகள் நிறுவனத்தின் வர்த்தக தேவைகளை பொறுத்து முடிவு செய்யப்படுகின்றன, சில சமயங்களில் அவை வணிக தேவைகளுக்கு ஏற்ப மாற்றப்படலாம்."
ஆகஸ்ட் 1ஆம் தேதி மத்திய தொழிலாளர் துறை அமைச்சகத்தில் தலைமை தொழிலாளர் கமிஷ்னர் அலுவலக அதிகாரிகள் மற்றும் NITES அமைப்பின் மூத்த நிர்வாகிகள் உடன் சந்திப்பு நடந்தது. இக்கூட்டத்தில் டிசிஎஸ் 600 ஊழியர்களுக்கு பணியில் சேரும் நாள் அளிக்காதது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இந்த 600 ஊழியர்கள் 2-18 வருட அனுபவம் கொண்டவர்களாகும், மேலும் இவர்கள் பெங்களூர், ஹைதராபாத், புனே, கொல்கத்தா, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் பணியில் அமர்த்தப்படக்கூடியவர்கள். டிசிஎஸ் நிறுவனத்தின் செய்திதொடர்பாளர்களும் வர்த்தக சூழ்நிலை அடிப்படையில் இவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என உறுதியளித்துள்ளார்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications