இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது சேவை மற்றும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடர்ந்து பம்பரமாகப் பணியாற்றி வரும் இதேவேளையில் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் மிக முக்கியமான பணிகளைச் செய்து வருகிறது.
ஏற்கனவே விப்ரோ, இன்போசிஸ் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அழைத்துள்ள நிலையில் டிசிஎஸ் நிறுவனமும் அனைத்துப் பிரிவு ஊழியர்களையும் அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் டிசிஎஸ் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது.
டிசிஎஸ்
கொரோனா தொற்றுக் காரணமாக 2 வருடமாக டிசிஎஸ் ஊழியர்கள் வீட்டில் பணியாற்றி வந்த நிலையில், தற்போது ஹைப்ரிட் மாடல் உடன் ஊழியர்களை அழைத்து வருகிறது. மேலும் ஊழியர்களின் நலனுக்காக டிசிஎஸ் நிர்வாகம் தனது அலுவலகத்தில் 25*25 மாடல், occasional operating zones (OOZ), மற்றும் ஹாட் டெஸ்க் போன்ற சில முக்கியமான சேவைகளையும் அறிமுகம் செய்துள்ளது.
உயர் மட்ட அதிகாரிகள்
டிசிஸ் நிறுவனத்தின் தற்போது உயர் மட்ட அதிகாரிகள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றத் துவங்கியுள்ளனர், விரைவில் படிப்படியாகப் பிற ஊழியர்களுக்கும் அலுவலகத்தில் வந்து பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் அடுத்த சில மாதத்தில் பெரும் பகுதி ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர உள்ளனர்.
நிரந்தர WFH
இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது பல ஊழியர்களுக்கு நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதனால் பலர் வேலையை ராஜினாமா செய்யும் வழக்கம் குறைந்துள்ளது. இதனால் ஊழியர்களைத் தக்க வைப்பதில் டிசிஎஸ் சிறந்து விளங்குகிறது.
ஐடி நிறுவனங்கள்
டிசிஎஸ் நிறுவனத்தைப் போலவே இன்போசிஸ் நிறுவனமும் பல ஊழியர்களுக்கு நிரந்தமாக வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுமட்டும் அல்லாமல் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் புதியதாகப் பணியில் சேர்க்கப்படும் ஊழியர்களுக்கு நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்றவும் வாய்ப்பு அளிக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications