இந்தியாவில் அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக இருந்து வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதிக லாபம் ஈட்டும் நிறுவனம் என்ற குறியீட்டை தற்போது இழந்துள்ளது.
அதற்கு பதிலாக தற்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம், கடந்த மார்ச் 2020ம் காலாண்டில் அதனை தட்டி சென்றுள்ளது.
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் வரிக்கு பிறகு 8,049 கோடி ரூபாய் லாபம் கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இரு நிறுவனங்களும் நஷ்டம் தான்
இதே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வரிக்கு பிறகு 6,348 கோடி ரூபாய் லாபத்தினை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது மார்ச் காலாண்டில் 39% வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரம் டிசிஎஸ் நிறுவனம் வீழ்ச்சி கண்டிருந்தாலும், 1% தான் வீழ்ச்சி கண்டுள்ளது.
டிசிஎஸ்-ஐ வி பெரிய நிறுவனம்
கிட்டதட்ட இரண்டு தசாப்தங்களாக தனியார் துறையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், மிகவும் இலாபகரமான நிறுவனமாக இருந்து வருகிறது. முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் டிசிஎஸ்-ஐ விட இயக்க லாபம், நிகர மதிப்பு, சொத்துக்கள் மற்றும் சந்தை மூலதனம் போன்ற அளவுருக்களில் அதிகமாக இருந்து வருகிறது.
வருட நிகரலாபம்
இதே கடந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 39,354 கோடி ரூபாயாக லாபம் கண்டுள்ளது. இதே டிசிஎஸ் நிறுவனம் 32,340 கோடி ரூபாயாக லாபம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 30 காலாண்டுகளில் முதல் முறையாக வருட அடிப்படையில் நிகர லாபம் கடந்த நிதியாண்டில் தான் குறைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
அதிகரிக்கும் சந்தை மூலதனம்
அதுமட்டும் அல்ல இந்த நிறுவனங்களில் சந்தை மூலதனமும் குறைந்துள்ளது. டிசிஎஸ் நிறுவனம் 2012 தொடங்கி, ஐந்து ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வந்தது. ஆனால் 2018-ன் தொடக்கத்தில் இருந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முன்னேற்றம் கடந்தது. ஏனெனில் அதன் முதலீட்டாளர்கள், அதன் வெற்றிகரமான நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் வெற்றியை கொண்டாடினர்.
சந்தை மூலதனம் எவ்வளவு
சவுதி அராம்கோவிற்கு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதன் பங்கு விற்பனை செய்த போது, அந்த நிறுவனத்தின் கடன் குறையும் என்ற எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள், ரிலையன்ஸ் நிறுவனத்தில் பங்குகளை வாங்கி குவித்தனர். இதனால் அதன் பங்கு விலையானது அதிகரிக்க தொடங்கியது. அதனால் அதன் சந்தை மூலதனமும் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் தற்போதைய பங்கு விலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 9.3 டிரில்லியன் ரூபாயாகவும், இதே டிசிஎஸ்ஸின் சந்தை மூலதனம் 7.6 டிரில்லியன் ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications