இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளில் லாபம், வருவாய் என அனைத்தும் உயர்வுடன் அறிவித்தாலும் சந்தை கணிப்புகளை எட்டாதது பெரும் சோகம். ஆனால் இதற்கு காரணமாக ஊழியர்கள் பணிநீக்கமும், ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட Serverance pay ஆகியவற்றின் மூலம் ஏற்பட்ட இழப்பு அதைவிட பெரும் சோகத்தை ஐடி ஊழியர்களுக்கு அளித்துதது.
இதை அனைத்தையும் துடைத்தெறியும் வகையில் டிசிஎஸ் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வேரியபிள் பே மற்றும் சம்பள உயர்வு குறித்த அறிவிப்பை ஒரே நேரத்தில் வெளியிட்டு அதன் ஊழியர்களை குஷிப்படுத்தியுள்ளது.

டிசிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பின் பிட தனது ஊழியர்களுக்கு செப்டம்பர் காலாண்டுக்கான வேரியபிள் பே தொகை C, C1, மற்றும் C2 நிலைகளில் உள்ள கீழ் நிலை ஊழியர்களுக்கு 100% வழங்கப்படும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதேபோல் C3A மற்றும் அதற்கு மேல் பதவிகளில் இருக்கும் மூத்த நிலை ஊழியர்களான வேரியபிள் பே தொகை கடந்த ஆண்டு விட அதிகமாக இருக்கும் என்று அறிவித்துள்ளது.
வேரியபிள் பே மற்றும் சம்பள உயர்வு குறித்து TCS-ன் தலைமை மனிதவள அதிகாரி (CHRO) சுதீப் குண்ணுமல், ஊழியர்களுக்கு அனுப்பிய அனுப்பிய மின்னஞ்சலில், C3A வரையிலான பதவிகளில் உள்ள ஊழியர்களுக்கு செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் வருடாந்திர சம்பள உயர்வு அமல்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். பணியில் உயர்ந்த செயலாற்றல் காட்டியவர்கள் இரட்டை இலக்க சம்பள உயர்வைப் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சுதீப் குண்ணுமல் கூறுகையில், மத்திய மற்றும் மூத்த நிலை ஊழியர்கள் அதாவது C3A மற்றும் அதற்கு மேல் நிலையில் இருக்கும் ஊழியர்களுக்கான காலாண்டு வேரியபிள் பே தொகை கடந்த ஆண்டு விட அதிகமாக இருக்கும் என்று ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதேபோல் சம்பள உயர்வை பார்க்கும் போது இப்பிரிவு ஊழியர்களுக்கு அவர்களின் வர்த்தக செயல்திறன், ஊழியரின் தனிப்பட்ட செயல்திறன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
C, C1, மற்றும் C2 நிலைகளில் உள்ள கீழ் நிலை ஊழியர்கள் பொதுவாக சிறப்பான சம்பள உயர்வு மற்றும் முழு வேரியபிள் பே தொகையை பெறுவார்கள், ஏனெனில் அவர்களது சம்பளம் குறைவான அளவில் இருக்கும். ஆனால் மூத்த நிலையில் இருக்கும் ஊழியர்களின் சம்பளமும் அதிகம், அவர்களின் பொறுப்பும் அதிகம்.
டிசிஎஸ் ஊழியர்களுக்கு வேரியபிள் பே மற்றும் சம்பள உயர்வு ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளதால் இதை தீபாவளி பரிசு என அழைக்கும் அளவுக்கு உள்ளது.
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications