இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்த நிலையிலும், கொரோனா தடுப்பு மருந்து அனைத்து ஊழியர்களுக்கும் அளிக்கப்பட்டு உள்ள நிலையில், இயல்பான வர்த்தகக் கட்டமைப்புக்குத் திரும்ப டிசிஎஸ் நிறுவனமும் முடிவு செய்துள்ளது.
ஆனால் டிசிஎஸ் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது டிசிஎஸ் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஈமெயில் மூலம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
டிசிஎஸ் நிறுவனம்
டிசிஎஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர துவங்கியுள்ள நிலையிலும், பெரிய வர்த்தக அணிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்று டிசிஎஸ் நிர்வாகம் அனைத்து ஐடி ஊழியர்களுக்கும் முக்கியமான முடிவுடன் ஈமெயில் அனுப்பியது.
டிசிஎஸ் ஊழியர்கள்
டிசிஎஸ் நிர்வாகம் மற்றும் உயர் அதிகாரிகள் பலமுறை டிசிஎஸ் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர அறிவுறுத்தியும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், இன்று அனுப்பிய மின்னஞ்சலில் அனைத்து ஊழியர்களும் (அணி, பதவி, ஆண், பெண், கிளையிட் என எவ்விதமான வித்தியசமும் இல்லாமல்) வாரத்தில் 3 நாள் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.
மேனேஜர்கள்
இதற்காக மேனேஜர்கள் எந்த ஊழியர்கள் எந்த நாளில் வர வேண்டும் என்பதற்காக Roster தயாரிப்பார்கள், அதைக் கட்டாயம் அனைத்து ஊழியர்களும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் இந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிர்வாக நடவடிக்கைகள்
இந்த விதிமுறைக்கு இணங்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டும் அல்லாமல் நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப் பரிந்துரைக்கப்படும் என மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது. அதாவது ஹெச்ஆர் பிரிவில் இருந்து வார்னிங் வரும், அதையும் மீறினால் பணிநீக்கம் செய்யப்படும் என்பதைத் தான் நிர்வாக நடவடிக்கைகள் எனக் குறிப்பிட்டு உள்ளது.
25/25 மாடல்
டிசிஎஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் இருந்து உலகம் முழுவதிலும் இருக்கும் அனைத்து அலுவலகத்திலும் 25/25 மாடலை கொண்டு வர வேண்டும் என்பதை முக்கிய இலக்காக வைத்துள்ளது.
80 சதவீத ஊழியர்கள் WFH
டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது வெறும் 20 சதவீத ஊழியர்கள் அதுவும் மூத்த அதிகாரிகள் மட்டுமே அலுவலகத்திற்கு வருகின்றனர். மற்ற அனைத்து ஊழியர்களும் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications