இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் முன்னாள் சிஇஓ-வான ராஜேஷ் கோபிநாதன் ராஜினாமா செய்வதாகவும், இந்தப் பதவியைக் கே கிருதிவாசன் அவர்களுக்கு அளிக்கப்படுவதாகவும் மார்ச் 16 ஆம் தேதி மாலையில் செய்தி வெளியானது.
இந்தச் செய்தி கேட்டு பலரும் அதிர்ச்சி அடைந்தது மட்டும் அல்லாமல் டிசிஎஸ் நிறுவனத்தின் எதிர்காலம் என்ன என்பது குறித்துப் பல கேள்விகள் எழுந்தது. கே.கருதிவாசன் ஜூன் மாதம் சிஇஓ-வாகப் பதவியேற்று நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வரையில் ராஜேஷ் கோபிநாதன் உதவி செய்தார். இந்த நிலையில் கடந்த 3 மாதத்தில் ராஜேஷ் கோபிநாதன் திடீரென மாயமானார்.

இந்த நிலையில் ராஜேஷ் கோபிநாதன் இப்போது என்ன செய்கிறார் என்ற கேள்வி பெரும்பாலான ஐடி ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக இன்போசிஸ், விப்ரோ உயர் அதிகாரிகள் அதிகப்படியாகப் போட்டி நிறுவனத்தில் உயர் பதவியில் அமர்ந்து வரும் வேளையில் டிசிஎஸ் போன்ற பெரும் நிறுவனத்தின் சிஇஓ என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது.
இந்த நிலையில் தற்போது முக்கியமான விஷயம் தெரிய வந்துள்ளது, டிசிஎஸ் EX-CEO ராஜேஷ் கோபிநாதன் பாஸ்டன் கன்சல்டிங் குரூப்-ன் TMT டெல்லி குழுவின் மூத்த ஆலோசகராக இணைந்துள்ளார். பாஸ்டன் கன்சல்டிங் குரூப்-ன் TMT பிரிவு சர்வதேச ஐடி ஊழியர்கள் மற்றும் டேட்டா சைன்டிஸ்ட் உடன் இணைந்து புதிய ஸ்டேடர்ஜி மற்றும் பிஸ்னஸ் மாடல்களை உருவாக்கியுள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தில் ராஜேஷ் கோபிநாதன்-க்கு 2027 வரையில் சிஇஓ-வாகப் பணியாற்றும் கால அவகாசம் இருந்த போதிலும், பதவிக் காலம் முடிவதற்கு 3 வருடத்திற்கு முன்பே பதவியை ராஜினாமா செய்தார். 2023 ஆம் நிதியாண்டுக்கு மட்டும் ராஜேஷ் கோபிநாதன் சுமார் 30 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றார்.
ராஜேஷ் கோபிநாதனின் உறுதியான முடிவு தான் டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் கொடுத்து ஒட்டுமொத்த ஐடி சேவை துறையைக் காப்பாற்றியது. இல்லையெனில் ஒட்டுமொத்த ஐடி துறையும் மோசமான நிலையை அடைந்திருக்கும், காரணம் இந்திய ஐடி துறையில் முதல் ஆளாக அனைத்து ஊழியர்களுக்கும் வொர்க் ப்ரம் ஹோம் என அறிவித்தது ராஜேஷ் கோபிநாதன் தலைமையிலான டிசிஎஸ் தான்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications