இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ்-ம் பிற போட்டி நிறுவனங்களை போலவே அதிக மதிப்புடைய புதிய திட்டங்களை சர்வதேச சந்தையில் பெறுவதில் கடுமையான சவால்களை சந்தித்து வருகிறது. ஆனால் கையில் இருக்கும் வாடிக்கையாளர்களை இழக்க கூடாது என்பதில் மிகவும் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது.
இந்த நிலையில் நெதர்லாந்து நிறுவனமான Athora உடன் செய்த ஒப்பந்தம் மீண்டும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. VIVAT என முன்பு அழைக்கப்பட்ட Athora Netherlands நிறுவனம் அந்நாட்டில் லைப் இன்சூரன்ஸ் மற்றும் பெஷன் சேவைகளை வழங்கி வருகிறது.

டிசிஎஸ் உடனான கூட்டணியில் Athora Netherlands நிறுவனம் தனது வாடிக்கையாளர் சேவைகளையும், ஆப்ரேஷனல் ரெசிலியன்ஸ், பிஸ்னஸ் வளர்ச்சி ஆகியவைற்ற மேம்படுத்தி வந்தது. இந்த நீட்டிக்கப்பட்ட ஒப்பந்தம் மூலம் டிசிஎஸ் நிறுவனத்தின் கிளவுட் சேவை மூலம் மேம்படுத்த உள்ளது.
இதன் மூலம் டிசிஎஸ் நிறுவனம் தனது பழைய வாடிக்கையாளரை தக்க வைத்துக்கொண்டது, இதன் மூலம் இத்திட்டத்தில் பணியாற்றியவர்கள் தொடர்ந்து இதில் பணியாற்றுவார்கள். மேலும் டிசிஎஸ் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெரிய வாடிக்கையாளரை இழந்தது போல் அல்லாமல் இதை சமாளித்துள்ளது.
ஜூன் மாதம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 2017ல் Transamerica Life Insurance நிறுவனத்துடன் சுமார் 10 வருடம் கொண்ட 2 பில்லியன் டாலர் மதிப்பிலான மாபெரும் ஐடி சேவை ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் மோசமான பொருளாதார காரணமாக முன்கூட்டியே முறிக்கப்படுவதாக அதாவது 6 வருடத்திலேயே டிசிஎஸ் நிர்வாகம் இருதரப்பு ஒப்புதல் உடன் முறித்துக்கொண்டது.
இது டிசிஎஸ் நிறுவனத்திற்கு பெரும் இழப்பாக பார்க்கப்பட்ட நிலையில், ஜூன் 1 ஆம் தேதி தான் டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக கே கிருதிவாசன் அதிகாரப்பூர்வமாக பதவியேற்ற நிலையில் அதே மாதத்தில் Transamerica Life Insurance நிறுவனத்துடனான ஒப்பந்த முறிவு செய்தி வந்தது கிருதிவாசன் நிர்வாகத்திற்கு முதலும் பெரிய சவாலாக பார்க்கப்பட்டது.
ஆனால் அடித்தடுத்து வர்த்தகம், சிறப்பான காலாண்டு முடிவுகள் மூலம் பங்கு முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பங்குச்சந்தையில் சாதகமான வர்த்தக சூழ்நிலையில் இயங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications