உலகம் முழுவதும் தற்போது ஐடி துறை மந்தமடைந்திருக்கிறது. இந்தியாவை சேர்ந்த ஐடி நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களுக்கு தான் ஐடி சேவை வழங்கி வருகின்றன. அமெரிக்க பொருளாதார மந்த நிலை ,அமெரிக்கா அரசின் வரி விதிப்பு நடவடிக்கை , ஏஐ பயன்பாடு ஆகியவை இந்திய ஐடி துறையை பெருமளவில் பாதிப்படைய செய்திருக்கிறது.
டிசிஎஸ் பணிநீக்கம்: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் திடீரென தங்களுடைய ஊழியர்களில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது . இதற்கு முன்னதாகவே டிசிஎஸ் நிறுவனம் தன்னுடைய பெஞ்ச் பாலிசி அதாவது ஊழியர்கள் எந்த பிராஜெக்டிலும் இல்லாம்ல் இருக்கும் காலம் தான் பெஞ்ச் காலம், அதில் மாற்றத்தை கொண்டு வந்தது.

பெஞ்ச் பாலிசி: அதாவது ஒரு ஆண்டுக்கு தொடர்ந்து 35 நாட்கள் எந்த ப்ராஜெக்டிலும் இல்லாமல் பெஞ்சில் இருக்கக்கூடிய ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய வழிவகை செய்யும் வகையில் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது. இந்த சூழலில் டிசிஎஸ் நிறுவன ஊழியர் ஒருவர் தன்னை கட்டாயப்படுத்தி வேலையை ராஜினாமா செய்ய வைத்தனர் என வெளியிட்டு இருக்கும் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கட்டாய ராஜினாமா: டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்த டிரெய்னீ ஊழியர் ரெடிட் தளத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் டிசிஎஸ் ஃபிரஷர்களை பணிக்கு அமர்த்துகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார். உண்மை அது கிடையாது, அகமதாபாத் மற்றும் புனே ஆகிய இடங்களில் இருக்கும் டிசிஎஸ் அலுவலகங்களில் பணியாற்றி வரக்கூடிய டிரெய்னீ நிலை ஊழியர்கள் கட்டாயப்படுத்தி வேலையில் இருந்து ராஜினாமா செய்யப்பட வைக்கின்றனர் என தெரிவித்திருக்கிறார்.
ரெடிட் பதிவு: நிறுவனம் டிரெய்னீகளை முதல் 5 வாரங்கள் வரை எந்த பிராஜெக்டிலும் சேர்க்காமல் கட்டாயப்படுத்தி பணி ராஜினாமா செய்ய வைத்திருக்கிறது என குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் . சில தினங்களுக்கு முன்னர் என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர் என தெரிவித்திருக்கிறார் . திடீரென ஹெச்.ஆர் இடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது, பேச வேண்டும் என அழைத்தார்கள் நான் சென்றே என்னுடைய போனை சுவிட்ச் ஆஃப் செய்ய சொன்னார்கள் என கூறியுள்ளார்.

மிரட்டி ராஜினாமா: என்னிடம் உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் தருகிறோம், ஒன்று நீங்களே தனிப்பட்ட காரணம் என கூறி வேலையை ராஜினாமா செய்துவிடுங்கள் 3 மாத சம்பளத்தோடு உங்களுக்கு ராஜினாமா கிடைக்கும், இல்லை என்றால் நாங்கள் உங்கள் மீது நெகடிவ் கடிதம் கொடுத்து வேலையை விட்டு நீக்குவோம் என கூறினார்களாம். இதனால் தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் தன் தந்தையிடம் பேச வேண்டும் என கூறியதற்கு ஹெச்.ஆர் அனுமதி வழங்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
15 நிமிடங்களில் முடிந்துவிட்டது: எனக்கு 15 நிமிடங்களே வழங்கப்பட்டன, நான் வேறு வழியில்லாமல் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்கிறேன் என கடிதம் வழங்கிவிட்டு வந்தேன் என தெரிவித்துள்ளார். கட்டாயப்படுத்தி என்னை ராஜினாமா செய்ய வைத்தனர், என்னை போலவே மேலும் சில டிரெய்னீகளும் ராஜினாமா செய்யப்பட வைத்தனர் என கூறியுள்ளார்.
பலரும் ராஜினாமா: இப்படி வேலைக்கு எடுத்து சில மாதங்களிலேயே ராஜினாமா செய்ய வைப்பதற்கு எதற்கு எங்களை வேலைக்கு எடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ள அவர்,12 ஆயிரம் ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவதாக கூறுகிறது டிசிஎஸ் ஆனால் உண்மையில் அது 80 ஆயிரம் வரை இருக்கும் என்பதே என்னுடைய கணிப்பு என அவர் தெரிவித்திருக்கிறார். ஏனெனில் நிறுவனம் கட்டாயப்படுத்தி பலரை ராஜினாமா செய்ய வைக்கிறது அந்த எண்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை எனக் கூறியிருக்கிறார்.
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications