இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் (TCS), அரசு கொள்முதல் போர்ட்டலான GeM-ஐ இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் முக்கியமான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திங்கள்கிழமை தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு Government e-Market (GeM)போர்டல் ஆகஸ்ட் 9, 2016 அன்று வணிக அமைச்சகத்தால், அனைத்து மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகள் இந்த பிரத்தியேக ஆன்லைன் தளத்தின் வாயிலாக பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்காக துவங்கப்பட்டது.

இந்த புதிய கட்டமைப்பை மேம்படுத்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தொடர்ந்து முயற்சித்து வருவதாக பியூஷ் கோயல் கூறினார். இந்த நிலையில் இத்தளத்தை மேம்படுத்துவதற்கான புதிய ஒப்பந்தாரர்-ஐ சேர்வு செய்துள்ளோம், டிசிஎஸ் இதற்கான ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது என பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இந்த போர்டலைப் பயன்படுத்தி மத்திய மற்றும் மாநிலத் துறைகள் தங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை நேரடியாக வாங்குவதன் மூலம் அதிகப்படியான அரசின் பணம் மிச்சப்படுத்த முடியும். இதில் சேமிக்கப்பட்ட பணத்தை மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும், இதேபோல் மக்களின் வரி பணத்தைச் சேமிக்கவும் உதவுகிறது என்றும் பியூஷ் கோயல் கூறினார்.
Government e-Market (GeM) தளத்தில் கடந்த ஆண்டு 2 லட்சம் கோடி ரூபாய் மத்தியிலான பொருட்கள் மற்றும் சேவைகளை நேரடியாக பெறப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இது 3 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தளத்தில் 63000 அரசு தரப்பு buyer-களும், 62 லட்சம் செல்லர்களும் உள்ளனர்.
இத்தளத்தில் பேப்பர் கிளிப் முதல் வாகனங்கள், கம்பியூட்டர்கள், அலுவலக பர்னிச்சர்கள் வரையில் வாங்க முடியும். இதேபோன்ற தளத்தை தென் கொரிய அரசு KONEPS என்ற பெயரில் வழங்கி வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் Government e-Market (GeM) போர்டல் உலகிலேயே 2வது பெரிய தளமாக உள்ளது.
மத்திய அரசு வருமான வரி தளத்தின் பணிகளை இன்போசிஸ் நிறுவனத்திடம் இருந்து கொடுத்த நிலையில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டது. இதனால் இந்த முறை Government e-Market (GeM)போர்டல் திட்டத்தின் பணிகளை டிசிஎஸ் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications