அரசு நிறுவனத்திற்கு இணையாக மதிக்கப்பட்ட டிசிஎஸ் நிறுவனம், 2008 ரெசிஷனில் கூட 500 ஊழியர்களை மட்டுமே பணிநீக்கம் செய்த நிலையில், தற்போது 12000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது டெக் துறையை மொத்தமாக புரட்டிப்போட்டு உள்ளது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்கு முன் அடுத்த அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் 12000 ஊழியர்கள் பணிநீக்க அறிவிப்பை தொடர்ந்து அடுத்தடுத்து பல அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. டிசிஎஸ் நிர்வாகம் தற்போது இந்நிறுவனத்தில் அனுபவம் மிக்க ஊழியர்களை பணியில் அமர்த்துவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும், ஊழியர்களுக்கான சம்பள உயர்வை உலகளவில் நிறுத்தி வைத்துள்ளதாகவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ஐடி ஊழியர்கள் பீதியில் இருக்கும் வேளையில், இத்தகைய அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல் டிசிஎஸ்-ல் பணியில் சேர காத்திருக்கும் நபர்களுக்கு இது, சோகமான செய்தியாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
டிசிஎஸ் நிறுவனம் சமீபத்தில் நடைமுறைப்படுத்திய புதிய கொள்கையின் கீழ், பணியில் ஈடுபடாமல் பென்சில் இருக்கும் ஊழியர்களை 35 நாட்களுக்குள் புதிய ப்ராஜெக்ட்-களில் இணைய வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளது. இல்லையெனில், அவர்கள் பணியில் இருந்தும், நிறுவனத்தை விட்டும் வெளியேறப்படுவார்கள் என அறிவித்திருந்தது.
இதன் ஒரு பகுதியாக, ஹைதராபாத், புனே, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் நூற்றுக்கணக்கான பணியாளர்களை படிப்படியாக பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை டிசிஎஸ் நிறுவனம் விரைவில் துவங்க உள்ளதாகவும் தெரிகிறது.
மேலும், ஏற்கெனவே டிசிஎஸ் நிர்வாகம் பணியில் நியமிக்க ஆஃபர் லெட்டர் வழங்கிய அனுபவமிக்க ஊழியர்களுக்கு, பணியில் இணைவதற்கு 65 நாட்களுக்கு மேல் தாமதம் ஏற்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இவர்களுடையே வேலையும் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இந்த பணிநீக்கங்கள் மற்றும் பணியமர்த்தல் தாமதங்கள் தொடர்பாக, ஐடி ஊழியர்களின் நல அமைப்பான NITES, மத்திய தொழிலாளர் அமைச்சகத்திற்கு புகார் அளித்துள்ளது. இந்த அமைப்பு, டிசிஎஸ்-இன் பணிநீக்கங்கள் "சட்டவிரோதமானவை" என்று குற்றம்சாட்டியுள்ளது.
இது, டிசிஎஸ் தொடர்பாக இந்த அமைப்பு அனுப்பிய மூன்றாவது கடிதமாகும். முதல் கடிதம், பணியில் ஈடுபடாத ஊழியர்களுக்கான புதிய கொள்கை தொடர்பாகவும், இரண்டாவது கடிதம், 600 அனுபவமிக்க ஊழியர்களின் பணியமர்த்தல் தாமதங்கள் தொடர்பாகவும் அனுப்பப்பட்டவை ஆகும். இந்த புகார்கள், ஐடி துறையில் ஊழியர் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளாகும்.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications