இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தக சந்தை கடந்த 3 வருடமாக அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்ட நிலையிலும் இந்திய ஐடி துறை பெரிய அளவில் உறுதுணையாக இருந்தது என்றால் மிகையில்லை.
அதிகப்படியான வேலைவாய்ப்பு, வீட்டில் இருந்து பணியாற்றினாலும் முழு சம்பளம் என மொத்த நுகர்வோர் சந்தையை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றியது ஐடி துறை என்றால் மிகையில்லை, ஆனால் இப்போது நிலைமை மொத்தமாக மாறியுள்ளது என்றால் மிகையில்லை.
குறிப்பாக முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் ஊழியர்களை பணியில் அமர்த்துவதை பெரிய அளவில் குறைத்துள்ளது.
ஐடி நிறுவனங்கள்
டிசிஎஸ், அக்சென்சர், ஹெச்சிஎல் உள்ளிட்ட இந்திய ஐடி நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 2,000 முதல் 15,000 ஊழியர்களை மட்டுமே புதிய பணியில் சேர்த்துள்ளது. இது முந்தைய காலாண்டுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை மட்டுமே பணியில் அமர்த்தியுள்ளது.
பணவீக்கம் மற்றும் புவிசார் அரசியல் பிரச்சனை
இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் பணவீக்கம் மற்றும் புவிசார் அரசியல் அழுத்தங்களை சமாளிக்க முன்னெச்சரிக்கையாக பணியமர்த்தும் எண்ணிக்கையை குறைத்துள்ளது. அமெரிக்காவில் கூகுள், மைக்ரோசாப்ட், டெஸ்லா, மெட்டா போன்ற முன்னணி டெக் நிறுவனங்களும் பணி அமர்த்துவதை நிறுத்த முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அக்சென்சர்
ஐடி துறையின் பெரு நிறுவனங்களில் ஒன்றான அக்சென்சர் கடந்த மூன்று காலாண்டில் சராசரியாக 40,000 பேர் பணியமர்த்தப்பட்ட நிலையில், மே மாதத்தில் முடிவடைந்த மிக சமீபத்திய காலாண்டில் 12,000 நபர்களை மட்டுமே பணியமர்த்தியது. மே மாத துவக்கத்தில் அக்சென்சர் சுமார் 1,50,000 ஊழியர்களை புதிதாக நியமிக்க திட்டமிட்டு உள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
ஏப்ரல்-ஜூன் காலாண்டில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 14,136 புதிய ஊழியர்களை பணியமர்த்தியுள்ளது, இது முந்தைய நிதியாண்டில் சராசரியாக ஒரு காலாண்டில் பணியமர்த்தப்பட்ட எண்ணிக்கை 26000 ஆனால் ஜூன் காலாண்டில் இது பெரிய அளவிலான சரிவு. கடந்த 12 மாதங்களில் டிசிஎஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் 19.7% விகிதமாக உள்ளது.
HCL டெக்னாலஜிஸ்
இதேபோலவே, HCL டெக்னாலஜிஸ் 2023 நிதியாண்டின் முதல் காலாண்டில் 2,089 புதிய ஊழியர்களை மட்டுமே பணியமர்த்தியுள்ளது. FY22 இன் இறுதி காலாண்டில் 11,000 புதிய ஊழியர்களை பணியமர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 12 மாதங்களில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 23.8 சதவீதமாக உள்ளது.
ரெசிஷன் அச்சம்
இதேவேளையில் இனி வரும் காலாண்டிலும் புதிய வாடிக்கையாளர்களை பணியில் அமர்த்துவது என்பது குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வல்லரசு நாடுகளில் ரெசிஷன் வந்தால் கட்டாயம் பெரிய பாதிப்பு ஏற்படும் இதில் இருந்து தப்பிக்க செலவுகளை குறைப்பது முக்கிய பணியாக இருக்கும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications