டாடா குழுமத்திற்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களில் 2 சதவீதம் பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் உண்மையில் 2 சதவீதம் ஊழியர்கள் அல்ல பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை டிசிஎஸ் நிறுவனம் கட்டாயப்படுத்திய ராஜினாமா செய்ய வைக்கிறது என ஊழியர்கள் தொடர்ச்சியாக புகார் கூறிய வண்ணம் இருக்கின்றனர்.
டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களை மோசமாக நடத்துகிறது , மாஃபியா போல செயல்பட்டு ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குகிறது என ரெடிட் உள்ளிட்ட தளங்களில் டிசிஎஸ் ஊழியர்கள் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை தொடர்ச்சியாக பதிவு செய்த வண்ணம் இருக்கின்றனர். 15 ஆண்டுகள் விஸ்வாசமாக வேலை செய்த நபர் பணிநீக்கம், திடீரென ஒரே போன் காலில் கட்டாய ராஜினாமா என தொடர்ச்சியாக பல புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. புனே அலுவலகத்தில் ஒரே நேரத்தில் 2000க்கும் அதிகமான ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டதாக மகாராஷ்ரா அரசிடம் கூட புகார் அளிக்கப்பட்டது.

ஐடி ஊழியர்களுக்கான சங்கமும் டிசிஎஸ் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறது. டிசிஎஸ் பணிநீக்க நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிட வேண்டும் எனக் கூறி கடிதமும் எழுதி இருக்கிறது. இத்தகைய சூழலில் டிசிஎஸ் நிறுவனம் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் தந்திருக்கிறது. டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி சுதீப் குன்னுமல் பிடிஐ தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இதுவரை தங்கள் நிறுவனத்தில் பணிநீக்க நடவடிக்கை தொடங்கியதில் இருந்து தற்போது வரை 6000 பேர் வரை மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார் .
இது மொத்த ஊழியர்களில் 1 சதவீதம் மட்டுமே எனக் கூறியிருக்கும் அவர் நீக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் நிறுவனத்தில் மூத்த நிலையிலும் நடுத்தர நிலையிலும் வேலை செய்தவர்கள் எனக் கூறியிருக்கிறார். அதே நேரத்தில் 18,500 புதிய ஊழியர்களை புதிதாக நியமனம் செய்திருக்கிறோம் என்றும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.
டிசிஎஸ் பணிநீக்க எண்ணிக்கைகள் 80,000 என மிகைப்படுத்தி கூறப்படுகிறது, நிறுவனம் இத்தனை பேரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என எந்த இலக்கையும் வைத்து செயல்படவில்லை இது தொடர்பாக பல தவறான தகவல்கள் பரவுகின்றன என தெரிவித்திருக்கிறார் .
இதனிடையே ஐடி ஊழியர்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் டிசிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட 2025 -26ஆம் ஆண்டுக்கான முதல் காலாண்டு வெளியீட்டு அறிவிப்பில் 6 ,13 ,069 ஊழியர்கள் இருந்ததாக கூறியிருந்தது. அதுவே இரண்டாவது கானாட்டில் 5,93,314 ஊழியர்கள் இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் மூன்று மாதங்களில் அந்த நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கையில் 19,755 பேர் குறைந்து இருக்கின்றனர். அப்படி என்றால் இவர்கள் அனைவரும் நீக்கப்பட்டது இதன் மூலம் தெளிவாகி இருக்கிறது என அதில் குறிப்பிட்டுள்ளது.
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications