ஊழியர்கள் பணிநீக்கத்தை தொடர்ந்து ஒப்பந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் டிசிஎஸ்!!

சென்னை: இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. டாடா குழுமத்துக்கு சொந்தமான இந்த நிறுவனம் தங்களுடைய ஊழியர்களில் 2 சதவீதம் பேரை அதாவது 12000க்கும் அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக கடந்த வாரம் அறிவித்தது. இந்த சூழலில் டிசிஎஸ் நிறுவனத்தின் மற்றொரு நடவடிக்கையும் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

டிசிஎஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்ற ஊழியர்களை தேர்வு செய்யும் நடைமுறைகளை தொடங்கியிருக்கிறதாம். தாங்களாக நேரடியாக ஊழியர்களை தேர்வு செய்வது ,நேர்காணல் நடத்துவது உள்ளிட்டவற்றை நடத்தாமல் மூன்றாவதாக ஒரு நிறுவனத்தை இதற்காக நியமனம் செய்திருக்கிறதாம். மின்ட் தளம் வெளியிட்டு இருக்கும் செய்தியின் படி டிசிஎஸ் நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த Pantoon Service என்ற நிறுவனத்தோடு இதற்காக ஒப்பந்தம் செய்திருக்கிறது.

ஊழியர்கள் பணிநீக்கத்தை தொடர்ந்து ஒப்பந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் டிசிஎஸ்!!

டிசிஎஸ் நிறுவனத்திற்கு தேவையான ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை தேர்வு செய்து வழங்கும் பொறுப்பினை இந்த நிறுவனம் பெற்றிருக்கிறது. இந்த ஊழியர்களுக்கான சம்பளமும் நேரடியாக டிசிஎஸ் நிறுவனத்தின் வழியாக செல்லாமல் Pantoon Service நிறுவனம் வழியாக செல்லும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒப்பந்த ஊழியர்களுக்கு அழைப்பு விடுப்பது, நேர்காணல் நடத்துவது , அவர்களுக்கான சம்பளத்தை வழங்குவது உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் Pantoon Service நிறுவனம் கையாள இருக்கிறது. டிசிஎஸ் நிறுவனத்தின் மனிதவளத்துறை இதில் எந்த நேரடி தொடர்பும் கொண்டு இருக்காது என அந்த செய்தி குறிப்பிடுகிறது . தங்களுடைய நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்கள் பணியமர்த்தலில் வெளிப்படை தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Pantoon Service நிறுவனம் முதல் கட்ட நேர்காணல் நடத்திய பிறகு இறுதி நேர்காணல் மட்டுமே டிசிஎஸ் நிறுவனம் நடத்தும் என அந்த செய்தி குறிப்பிடுகிறது. இது தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு மேலாகவே டிசிஎஸ் நிறுவனம் Pantoon Service நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் தற்போது அது நடைமுறைக்கு வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .

டிசிஎஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான முழு நேர ஊழியர்களை தொடர்ந்து தன்னுடைய ஹெச்ஆர் மூலமாகவே பணிக்கு அமர்த்தும் தெரிவித்து இருக்கிறது. பொதுவாக இதுபோல ஒப்பந்த முறையில் நியமனம் செய்யும் ஊழியர்கள் ஓர் ஆண்டுக்கு மட்டுமே வேலையில் இருப்பார்கள். இவர்களுக்கு 30,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+