ஐடி நிறுவனங்கள் கொடுக்கும் எச்சரிக்கை சிக்னல்.. ஐடி ஊழியர்களே உஷார்..!

ஏப்ரல் மாதம் துவங்கியதும் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இக்காலாண்டு முடிவுகள் மூலம் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களின் பல பிரச்சனைகள் வெளிச்சத்திற்கு வந்தது மட்டும் அல்லாமல ரெசிஷன், வங்கி திவால் மூலம் எத்தகைய பிரச்சனைகளை எல்லாம் இந்திய ஐடி நிறுவனங்கள் சந்திக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ள டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் நிறுவனங்கள் அனைத்தும் ஐடி ஊழியர்களும், ஐடி துறையில் வேலை தேடுபவர்களுக்கும் முக்கியமான ஒரு சிக்னல் கொடுத்துள்ளது. இது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது, இதே வேளையில் அடுத்த சில நாட்களில் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோவும் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது.

ஐடி நிறுவனங்கள் கொடுக்கும் எச்சரிக்கை சிக்னல்.. ஐடி ஊழியர்களே உஷார்..!

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 2023 ஆம் நிதியாண்டில் 22,600 ஊழியர்களை மட்டுமே பணியில் சேர்த்துள்ளது. ஆனால் 2022 ஆம் நிதியாண்டில் 1,03,000 ஊழியர்களை பணியில் சேர்த்து இருந்தது. இதன் மூலம் டிசிஎஸ் நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு விகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் 2023 ஆம் நிதியாண்டில் 78 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.

இதேபோல் இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் 2023 ஆம் நிதியாண்டில் 29,219 ஊழியர்களை மட்டுமே பணியில் சேர்த்துள்ளது. ஆனால் 2022 ஆம் நிதியாண்டில் 54,396 ஊழியர்களை பணியில் சேர்த்து இருந்தது. இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு விகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் 2023 ஆம் நிதியாண்டில் 46 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.

டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனங்களை தொடர்ந்து ஹெச்சிஎல் டெக் நிறுவனம் 2023 ஆம் நிதியாண்டில் 17,067 ஊழியர்களை மட்டுமே பணியில் சேர்த்துள்ளது. ஆனால் 2022 ஆம் நிதியாண்டில் 39,900 ஊழியர்களை பணியில் சேர்த்து இருந்தது. இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு விகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் 2023 ஆம் நிதியாண்டில் 57 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.

இது மட்டும் அல்லாமல் அடுத்த சில காலாண்டுகளுக்கு ஹெச்சிஎல், இன்போசிஸ் நிறுவனத்தில் Hiring அளவு பெரிய அளவில் கணிசமான தாக்கம் இருக்கும் என்பதை தொரிவித்துள்ளது. குறிப்பாக ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் தலைமை மக்கள் அதிகாரி கடந்த 2 காலாண்டில் இருந்த Hiring அளவு தான் அடுத்த சில காலாண்டுகளுக்கு தொடரும் என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இந்திய ஐடி நிறுவனங்கள் கொடுக்கும் முக்கியமான சிக்னல் என்னவென்றால் ஐடி துறையில் அடுத்த சில காலாண்டுகளுக்கு வேவைவாய்ப்பு என்பது மிகவும் குறைவு. குறிப்பாக பிரஷ்ஷர்களுக்கு வேலை கிடைப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+