பணத்தை கொட்ட நாங்க ரெடி.. ஐடி நிறுவனங்களின் திடீர் முடிவு.. ஐடி ஊழியர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!

இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ஐடி ஊழியர்கள் தங்களுடைய சம்பள உயர்வை வாங்காமல் இருக்கும் வேளையில் ஜூன் காலாண்டுக்கான வேரியபிள் பே தொகைக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ஐடி நிறுவனங்கள் முக்கியமான முடிவை எடுத்துள்ளது, இதனால் ஐடி ஊழியர்களின் வாழ்க்கையே மாறிடும் நிலை உள்ளது.

இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள், 2023 ஆம் நிதியாண்டில் அதிகப்படியான மாற்றத்தையும், பாதிப்புகளையும் எதிர்நோக்கி வந்துக்கொண்டு இருக்கும் வேளையில் சர்வதேச பொருளாதார மந்த நிலை பெரும் தடுமாற்றத்தை ஐடி நிறுவனங்களின் வர்த்தகத்திற்கு கொடுத்தது.

பணத்தை கொட்ட நாங்க ரெடி.. ஐடி நிறுவனங்களின் திடீர் முடிவு.. ஐடி ஊழியர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!

இந்த நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு புதிய தொழிற்நுட்பத்தில் வர்த்தகத்தை ஈர்க்கவும், சேவை அளிக்கவும் முடிவு செய்தது. ஆனால் இதற்கு போதுமான திறன்வாய்ந்த ஊழியர்கள் இல்லாத காரணத்தால் அதிகளவிலான ஊழியர்களுக்கு வேகமாக புதிய தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதன் அடிப்படையில் பெரும் தொகையை முதலீடு செய்து நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அனைத்தும் தங்களது ஊழியர்களுக்கு ஜெனரேட்டிவ் ஏஐ துறையில் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக மைக்ரோசாப்ட், கூகுள் மற்றும் இதர முன்னணி நிறுவனங்களின் AI suite-ல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் சமீபத்திய அறிவிப்பாக டெக் மஹிந்திரா நிறுவனம் 2023- 24 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் சுமார் 8000 ஊழியர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளதாக இந்நிறுவனத்தின் தலைமை மக்கள் அதிகாரி மற்றும் மார்கெட்டிங் பிரிவின் தலைவருமான ஹர்ஷ்வேந்திர சோயின் தெரிவித்துள்ளார்.

இதுமட்டும் அல்லாமல் அதிகப்படியான ஊழியர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என ஹர்ஷ்வேந்திர சோயின் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இதேபோன்ற அறிவிப்பை டிசிஎஸ் வெளியிட்டது.

டிசிஎஸ், மைக்ரோசாப்ட் உடன் இணைந்து கடந்த மாதம் 25000-த்திற்கும் அதிகப்படியான ஊழியர்களுக்கு AI suite-ல் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது என அறிவித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் Microsoft's AI Council -லில் டிசிஎஸ் இணைந்து டேட்டா மற்றும் AI துறையில் பார்ட்னராக உள்ளது.

இதேபோல் விப்ரோ, கூகுள் கிளவுட் உடன் இணைந்து 20000 ஊழியர்களுக்கு AI பிரிவில் பயிற்சி அளித்து திறனை மேம்படுத்தியுள்ளது. இன்போசிஸ் கிளவுட், டேட்டா, சைபர் செக்யூரிட்டி போன்ற புதிய தொழில்நுட்ப துறையில் தொடர்ந்து பயிற்சி அளிக்கும் முடிவை எடுத்துள்ளது.

முன்னணி ஐடி நிறுவனங்கள் கிளவுட், AI துறையில் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு, அனுபவத்தையும் கொடுத்த தயாராக உள்ளது. இந்த நிலையில் ஐடி ஊழியர்கள் இதில் தேர்ச்சி பெறுவதன் மூலம் புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு மாறும் வாய்ப்பை பெற உள்ளனர். இதன் மூலம் ஐடி ஊழியர்களின் பணி வாழ்க்கையில் சிறப்பு மிக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+