இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் சமீபத்தில் 12000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது ஒட்டுமொத்த டெக் துறைக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் இதைவிட அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஏஐ, வர்த்தக மாற்றம், ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள், குறைந்து வரும் புதிய வர்த்தகம், வர்த்தகத்திற்கு ஏற்ற ஊழியர்கள் இல்லாமல் இருப்பது என பல காரணங்களுக்காக டிசிஎஸ் அடுத்த ஒரு வருடத்தில் 12000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது.

இந்த பணிநீக்கத்தில் மீட் லெவல் மற்றும் சீனியர் லெவல் ஊழியர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என முன்பே அறிவிக்கப்பட்டது, இதோடு டிசிஎஸ் பென்ச் பாலிசியை அறிமுகம் செய்தது பலருக்கும் நினைவிருக்கும். இதன் வாயிலாகவும் அதிகப்படியான ஊழியர்கள் பாதிக்கப்படுவதாக கணிப்புகள் வெளியானது.
இந்த சூழ்நிலையில் டிவிட்டரில் சோஹம் சர்கார் என்பவர் வெளியிட்ட பதிவு இந்தியா முழுக்க இருக்கும் டெக் ஊழியர்கள் மத்தியில் குண்டை போட்டு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
சோஹம் சர்கார் தனது பதிவில், என்னுடைய கல்லூரி நண்பரை சந்தித்தேன் அவர் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார், சமீபத்தில் இந்நிறுவனத்தில் சுமார் 80000 டெக் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இதில் பெரும்பாலான ஊழியர்கள் 3 மாதம் severance pay கொடுத்து அனுப்பப்பட்டு உள்ளனர். இன்னும் சிலர் severance pay கூட இல்லாமல் அனுப்பப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளதாக பதிவிட்டு உள்ளார்.
இந்த பதிவு கடந்த 2 நாட்களில் 5 லட்சம் பார்வையாளர்களையும், 736 ரீடிவீட் மற்றும் 305 கமெண்ட்களையும் பெற்றுள்ளது. இந்த பதிவுக்கான கமெண்டில் பலர் இதை உண்மை எனவும், தனது நட்பு வட்டார்ங்களும் இதையே தான் சொன்னதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் சோஹம் சர்கார் பதிவுக்கு கமெண்ட் செய்த ஜஸ்ட் பிகாஸ் என்ற டிவிட்டர் கணக்காளர், இது முற்றிலும் உண்மை, என்னுடைய மேனேஜர் 25 வருடங்களாக டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் அவரை கட்டாயப்படுத்தி VRS எடுக்க வைத்துள்ளனர்.
இதேபோல் என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் 20 வருடம் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் அவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். என்னுடைய முன்னாள் மேனேஜர் ஒவ்வொரு வாரமும் fluidity list வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனக்கு கிடைத்த பல்வேறு தகவலின் படி கிட்டத்தட்ட 40000 முதல் 50000 டெக் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு டிரெண்டான நிலையில் டிசிஎஸ் செய்திதொடர்பாளர் சமுக வலைத்தளத்தில் 80000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக வெளியான செய்தியை வெறும் வதந்தி என தெரிவித்து, இத்தகவல்களை முற்றிலும் மறுத்துள்ளார்.
கடந்த வாரம் தான் டெக் சேவை துறையில் உலகளவில் மன்னனாக இருக்கும் அக்சென்சர் கடந்த 3 மாதத்தில் 11000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியதாக அறிவித்தது. இதை தொடர்ந்து டிசிஎஸ் நிறுவனத்திலும் இதேபோன்ற செய்திகள் வெளியாகியுள்ளது இந்திய டெக் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
கடந்த 2 வருடங்களாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒட்டுமொத்த டெக் துறையை தலைகீழாக புரட்டிப்போட்டு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஏஐ பயன்பாட்டின் காரணமாக பல டெக் சேவை வேகமாக அறிமுகப்படுத்துவர் கவர்ச்சிகரமாக இருந்தாலும் இது வேலைவாய்ப்பு துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் தற்போது ஐடி சேவை நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் ஸ்டார்ட்அப், ப்ராடெக்ட் நிறுவனங்களும் ஏஐ அடிப்படையிலான சேவையை அறிமுகம் செய்ய தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதேபோல் அடுத்த 2 வருடத்திற்கு டெக் துறை வேலைவாய்ப்பு சந்தை பெரும் தடுமாற்றத்தை சந்திக்கும் என்பது உறுதி.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

TCS ஊழியர்களுக்கு ரூ.40,000 போனஸ் அறிவிப்பு..!! ஆனால் ஒரு கண்டிஷன்..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?



Click it and Unblock the Notifications