டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தனது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 12,000 ஊழியர்களை நீக்குவதற்கு திட்டமிட்டுள்ளதை அடுத்து, இந்திய IT துறையின் மதிப்பீட்டு முறைகள் மாறப்போவதாக டெக் மஹிந்திராவின் முன்னாள் CEO மற்றும் ஐடி துறை நிபுணர் சி.பி.குர்னானி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் பல மிடில் கிளாஸ் மக்களை பணக்காரர்களாக மாற்றிய பெருமை ஐடித்துறைக்கு உண்டு, அதிலும் குறிப்பாக டிசிஎஸ் நிறுவனத்திற்கு இதில் பங்கீடு அதிகம் என்றால் மிகையில்லை. இந்தியாவில் ஐடி துறைக்கு திறன் வாய்ந்த ஊழியர்களுக்கு வேண்டும் என்பதற்காக கல்லூரிகளுடன் இணைந்து கல்வி முறையில் மாற்றத்தை கொண்டு வந்ததில் இருந்து இன்று நாட்டிலேயே அதிகப்படியான ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புகளை கொடுத்த ஒரு நிறுவனமாக விளங்குவது வரையில் டிசிஎஸ்-க்கு பெரும் பங்கு உள்ளது.

இந்த நிலையில் டிசிஎஸ் 12000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது ஐடித்துறைக்கு பெரும் அதிர்ச்சி செய்தாக உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் டிசிஎஸ்-ன் அறிவிப்பு ஒட்டுமொத்த ஐடி துறையை மாற்றப்போகு என டெக் மஹிந்திராவின் முன்னாள் CEO மற்றும் IT துறை நிபுணர் சி.பி.குர்னானி தெரிவித்துள்ளார்.
குர்னானி CNBC-TV18 உடன் பேசுகையில், இந்திய IT துறையில் இனி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை அடிப்படையாக கொண்டு ஒரு நிறுவனத்தை மதிப்பிடு செய்யும் காலம் (வசந்த காலம்) இனி முடிவுக்கு வரப்போகிறது" என்று தெரிவித்தார். அதற்கு பதிலாக, ஒரு நிறுவனத்தின் output மற்றும் outcome அடிப்படையிலான வணிக மாதிரிகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதை போல் நிறுவனங்கள் இனி IT மற்றும் சிஸ்டத்தை தனியாக பார்ப்பதை விட, இது வணிகத்திற்கும் வாடிக்கையாளர்களுக்கும் என்ன செய்யும் என்பதை கவனிக்க வேண்டும், விலை அடிப்படையிலான மாடல் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
TCS-இன் பணிநீக்கம் பற்றி பேசிய குர்னானி, தற்போது சில பழைய பணிகள் நீக்கப்படலாம் என்றாலும், செயற்கை நுண்ணறிவு (AI) காரணமாக பல புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்தார்.
இந்திய ஐடி சேவை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளன, ஏனெனில் AI இன்ஜினியர்கள், டேட்டா சைன்டிஸ்ட், ப்ராம்ட் இன்ஜினியர்ஸ் என பல புதிய தொழில்நுட்பத்தில் ஊழியர்கள் தேவைப்படுகின்றனர் என்று அவர் கூறினார்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ரூ.40,000 போனஸ் அறிவிப்பு..!! ஆனால் ஒரு கண்டிஷன்..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications