டாடா குழுமத்தின் குபேரனாக விளங்கும் ஐடி சேவை பிரிவாகவும், இந்தியாவில் அதிகப்படியானோருக்கு வேலைவாய்ப்புகளை அள்ளிக்கொடுக்கும் நிறுவனமாகவும் இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இன்று காலாண்டு முடிவுகள் உடன், முதலீட்டாளர்களுக்கு லாபம் கொடுக்கும் வகையில் பைபேக் திட்டத்தையும் அறிவிக்க உள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் கடந்த ஆறு ஆண்டுகளில் ஐந்தாவது பைபேக் திட்டத்தை இன்றும் அறிவிக்க உள்ளதால் அனைத்து டெக் நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் கவனமும் டிசிஎஸ் நிறுவனத்தின் மீது திரும்பியுள்ளது. பைபேக் திட்டம் குறித்து திட்டத்தை அக்டோபர் 11 ஆம் தேதி, அதாவது இன்று நிர்வாகக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது. இது ஒப்புதல் பெற்றால் அடுத்த சில மணிநேரத்தில் வெளியாக உள்ல டிசிஎஸ் காலாண்டு முடிவில் இந்த பைபேக் திட்ட அறிவிப்பும் வரும்.

டிசிஎஸ் நிறுவனம் இதற்கு முன்பு 2022இல் ரூ.4,500 விலையில் சுமார் ரூ.18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை சந்தையில் இருந்து திரும்ப வாங்கியது. அதற்கு முன்பு 2020, 2018 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் மூன்று பைபேக் திட்டத்தில் தலா 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை சந்தையில் இருந்து திரும்ப வாங்கியது. இதை 3000 ரூபா, 2100 ரூபாய், 2850 ரூபாய் என்ற விலையில் இந்த 3 ஆண்டுகளில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
பைபேக் திட்டம் என்பது ஒரு நிறுவனம் பொது வர்த்தக சந்தையில் இருக்கும் பங்குகளையும், பிற முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கும் பங்குகளையும் குறித்த விலையில் வாங்குவது தான். இதன் மூலம் பங்குகளை விற்பனை செய்யும் முதலீட்டாளர்களுக்கு நல்ல விலை கிடைக்கும், சந்தையில் புழக்கம் குறைவதால் எஞ்சியுள்ள முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு அதிகரிக்கும்.
அப்படி டிசிஎஸ் கடந்த 6 வருடத்தில் அறிவித்த 4 பைபேக் திட்டத்தின் மூலம் சுமார் 66000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை சந்தையில் இருந்து திரும்ப பெற்றுள்ளது. இன்று பைக்பேக் திட்டத்தை அறிவித்தால் 2017 ஆம் ஆண்டில் இருந்து 5வது பைபேக் திட்டமாக இருக்கும்.
டிசிஎஸ் நிர்வாகம் இந்த முறையும் 2022 ஆம் ஆண்டு போல் 18000 கோடி ரூபாய் மதிப்பிலான பைபேக் திட்டம் அறிவிக்க வாய்ப்புகள் உள்ளது, இதேபோல் இந்த தொகை 25000 கோடி ரூபாய் வரையில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இதேபோல் 2017 முதல் டிசிஎஸ் பைபேக் அறிவிக்கும் முன்பு டிசிஎஸ் பங்குகள் 4 முறையும் உயர்ந்தது. ஆனால் பைபேக் அறிவிக்கப்பட்ட பின்பு 4ல் 2 முறை பங்குகள் சரிந்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications