நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் கடந்த நிதியாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 0.27 சதவீதம் அதிகரித்து, 32,430 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே முந்தைய ஆண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் 32,340 கோடி ரூபாய் என இந்த நிறுவனம் பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதே கடந்த நிதியாண்டில் வருவாய் 4.6% அதிகரித்து, 1,64,177 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் 1,56,949 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
இதே இயக்க அளவு 25.9% ஆகவும், இதே நிகர அளவு 20.3% ஆகவும் இருந்துள்ளது. இதே நிதியாண்டின் இறுதியில் ஆர்டர் புக் 31.6 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டினை காட்டிலும் 17.1% அதிகரித்துள்ளது.
இதே கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 14.9% அதிகரித்து, 9,246 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 8,049 கோடி ரூபாயாக இருந்தது. இதே வருவாய் 9.4% அதிகரித்து, 43,705 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 39,946 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
காலாண்டிற்கான ஆர்டர் புத்தகம் கடந்த காலாண்டில் 9.2 பில்லியனாக அதிகரித்துள்ளது. இது காலாண்டில் மிக அதிக TCV என டிசிஎஸ் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனம் கடந்த நிதியாண்டிற்கான டிவிடெண்டினையும் அறிவித்துள்ளது. இது ஒரு பங்கிற்கு 15 ரூபாய் அறிவித்துள்ளது.