இந்திய ஐடி துறை ஏற்கனவே பொருளாதார மந்த நிலை காரணமாகப் புதிய திட்டங்களைப் பெறுவதில் அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், மார்ஜின் அளவு தொடர்ந்து பெரும் சுமையாக இருக்கிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் மூன்லைட்டிங் என்பது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் தலைவலியாக மாறியுள்ளது, இதைச் சரி செய்யும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் டிசிஎஸ் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
சந்தை மதிப்பீட்டு அளவில் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் அதன் ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் கூடுதலான வேலைகளை (GIGs)செய்யப் புதிய தளத்தை உருவாக்கத் திட்டமிட்டு உள்ளது.
கூடுதல் பணி
இத்தளம் தற்போது ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் நிலையில் விரைவில் டிசிஎஸ் ஊழியர்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது எப்படி ஐடி ஊழியர்கள் கூடுதல் அனுபவத்திற்காகவும், பணத்திற்காகவும் வேறு நிறுவனத்தில் கூடுதல் பணிகளைச் செய்கிறார்களோ, அதேபோல் இந்தத் தளமும் இயங்கும்.
ஐடி சேவை துறை
227 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐடி சேவை துறை முன்லைட்டிங் பிரச்சனையை எதிர்கொண்டு வரும் நிலையில், இத்தகைய தளம் மூன்லைன்ட்டிங் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியாக இருக்கும் என டிசிஎஸ் நிர்வாகம் நம்புகிறது. இத்தளத்தை அமைக்கத் தற்போது டிசிஎஸ் proofs of concept (PoCs) கொண்டு இயங்கி வருகிறது.
மிலிந்த் லக்காட்
டிசிஎஸ் நிறுவனம் உருவாக்க இருக்கும் இத்தளத்தில் டிசிஎஸ் ஊழியர்கள் அனைத்து விதமான டெக் பணிகளையும் செய்ய முடியும், ஆனால் பிற தளத்தில் இருப்பது போல் வாடிக்கையாளர்களிடம் (Client) நேரடியாகப் பேச முடியாது என டிசிஎஸ் நிறுவனத்தின் ஹெச்ஆர் பிரிவின் உயர் தலைவர் மிலிந்த் லக்காட் தெரிவித்துள்ளார்.
பணம் இல்லை
டிசிஎஸ் நிறுவனத்தில் சில முக்கியமான பணிகளை crowd-outsource மூலம் செய்ய முடியும். அது ஊழியர்களுக்கு அளிக்கப்படும், ஆனால் இந்தக் கூடுதல் பணிகளுக்குப் பணமாக வெகுமதி அளிக்கப்படமாட்டாது, ஆனால் மாறாகப் பிற வழிகளில் உரியப் பலன்களை அளிக்க திட்டமிடப்பட்டு வருகிறது என டிசிஎஸ் நிறுவனத்தின் ஹெச்ஆர் பிரிவின் உயர் தலைவர் மிலிந்த் லக்காட் தெரிவித்துள்ளார்.
இன்போசிஸ் முன்லைட்டிங்
விப்ரோ தொடர்ந்து இன்போசிஸ் முன்லைட்டிங் சேவைக்கு எதிராக இருப்பதை உறுதி செய்யும் வகையில், இரண்டு நிறுவனத்தில் ஓரே நேரத்தில் பணி செய்தவர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து இன்போசிஸ் சில நாட்களுக்கு முன்பு Accelerate என்னும் தளத்தின் மூலம் இன்போசிஸ் ஊழியர்கள் கூடுதல் பணிகளைச் செய்ய வாய்ப்பு உள்ளது என அறிவித்தது.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்!! சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்த மத்திய அரசு!!



Click it and Unblock the Notifications