டாடா குழுமத்திற்கு சொந்தமான ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ், ஓமன் நாட்டில் தங்களுடைய சொந்த அலுவலகத்தை திறந்துள்ளது. பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அலுவலகம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளிலும் டிசிஎஸ் நிறுவனம் தங்களுடைய சேவையை விரிவாக்கம் செய்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கான தலைவராக செயல்பட்டு வரக்கூடிய சுமந்தாராய் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள அவர் ஓமன் நாட்டில் நாங்கள் புதிய அலுவலகத்தை தொடங்கி இருக்கிறோம் ,சில மாதங்களுக்கு முன்பே இந்த அலுவலகம் திறக்கப்பட்டு விட்டது ஆனால் முறையான தொடக்க விழா அடுத்த மாதம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். ஓமன் நாட்டிற்கான இந்திய தூதர் இந்த அலுவலகத்தை திறந்து வைப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் அண்டை நாடான ஓமனில் இந்தியாவை சேர்ந்த பலரும் வேலை செய்கின்றனர். டிசிஎஸ் நிறுவனம் மற்ற நிறுவனங்கள் வழியாக ஓமன் நாட்டை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வந்தது ஆனால் இந்த புது அலுவலகத்தின் மூலம் இனி நேரடியாக ஓமனை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிவோம் என அவர் கூறியுள்ளார் .
மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் டிசிஎஸ் நிறுவனம் சுமார் 10,000 ஊழியர்களை கொண்டிருக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர். இது தவிர சவுதி அரேபியா ,ஓமன் ,எகிப்து , தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் பணியில் இருப்பதாக டிசிஎஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.
சவுதியின் ரியாத் நகரில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் 3000 பேர் பணிபுரிவதாக டிசிஎஸ் நிறுவனம் கூறுகிறது. இதில் 700 பேர் சவுதி நாட்டை சேர்ந்த பெண்கள் என சுமந்தா ராய் தெரிவிக்கிறார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் சாதாரண பிபிஓ சென்டராக தொடங்கப்பட்ட தங்களுடைய ரியாத் மையம் தற்போது பல்வேறு சேவைகளுக்கான மையமாக மாறி இருக்கிறது என கூறியுள்ளார்.
10 ஆண்டுகளுக்கு முன்னர் வரை சவுதி அரேபியாவில் நிறுவனங்களில் பெண்களை வேலைக்கு அமர்த்துவது பெரிய சவாலாக இருந்து தற்போது நிலைமை மாறி இருக்கிறது சுமார் 700 பெண்கள் எங்கள் நிறுவனத்தில் பணி புரிகின்றனர் என பெருமையாக கூறியுள்ளார்.
சவுதியில் ரியாத் மட்டுமில்லாமல் தம்மம் பகுதியிலும் தங்கள் நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்றும் ஓமனில் தொடங்கப்பட்டுள்ள அலுவலகம் தங்களுக்கு புதிய வாய்ப்புகளை பெற்று தரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications