டிசிஎஸ் நிறுவனம் 40,000 ஃபிரஷர்களை கேம்பஸ் இன்டர்வியூ மூலம் நடப்பு ஆண்டில் பணிக்கு அமர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவளத்துறை அதிகாரி மிலிந்த் லக்காட் இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
தற்போது கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் ஐடி பிரிவில் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 2024 - 2025 ஆம் நிதி ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு நிலவரப்படி டிசிஎஸ் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களின் எண்ணிக்கையில் 5 ஆயிரம் பேரை குறைத்து இருக்கிறது.

இந்த நிலையில் புதிதாக 40,000 பேரை ஃபிரஷர்களாக கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தேர்வு செய்ய இருக்கிறோம் என டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிசினஸ் ஸ்டாண்டர்டு தளத்துக்கு பேட்டி அளித்துள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் மனிதவளத்துறை அதிகாரி லக்காட் எந்த ஒரு காலாண்டிலும் தங்களுடைய நிறுவனத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை ஒரே மாதிரியாக இருந்ததில்லை எனக் கூறியுள்ளார். ஊழியர்களின் எண்ணிக்கை குறைவது தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியிலோ அல்லது புதிதாக ஆட்களை பணிக்கு அமர்த்த வேண்டுமென்ற இலக்கிலோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என கூறுகிறார்.
ஒரு ஆண்டிற்கு ஃபிரஷர்களாக எவ்வளவு பேரை பணிக்கு அமர்த்த வேண்டும் என்பது குறித்து ஆண்டின் தொடக்கத்திலேயே நாங்கள் முடிவு செய்து விடுவோம் அதன் அடிப்படையில் தான் நாங்கள் செயல்படுவோம் என கூறியுள்ளார்.
ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் தங்கள் நிறுவனத்தின் செயல் திறனில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் கூறியுள்ளார். மேலும் தங்களுடைய நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
இதற்காக நிறுவனத்தை சேர்ந்த லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயிற்சியும் வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். டிசிஎஸ் நிறுவனத்தில் ட்ரெய்னி நிலையில் பணிக்கு வருபவர்களுக்கு கூட செயற்கை நுண்ணறிவு மற்றும் பெரிய அளவிலான லாங்குவேஜ் மாடல்கள் தொடர்பான அடிப்படை புரிதல் இருக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மனிதர்களின் வேலை வாய்ப்பு பறிபோகாது எனக் கூறியுள்ள அவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம்முடைய வேலையை இன்னும் மேம்படுத்தப் போகிறது என்கிறார். செயற்கை நுண்ணறிவு மாடல்களுக்கு பயிற்சி தருவது, அவற்றை இன்னும் மேம்படுத்துவது ,அவற்றை திறம்பட செயல்பட வைப்பது உள்ளிட்ட வேலைகளுக்கு மனிதர்கள் தான் தேவைப்படுவார்கள் என கூறியுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications