இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் டிசிஎஸ் இன்று செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
ஐடி துறையில் முதல் நிறுவனமாகச் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது டிசிஎஸ், இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகப்படியான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
டிசிஎஸ் நிறுவனம்
டிசிஎஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் சுமார் 55,309 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது, இது கடந்த ஆண்டை காட்டிலும் 18 சதவீதம் அதிகமாகும். இதேபோல் டிசிஎஸ் நிறுவனம் இக்காலாண்டில் 10,431 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது, இது கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 8.4 சதவீதம் அதிகமாகும்.
செப்டம்பர் காலாண்டு முடிவுகள்
செப்டம்பர் காலாண்டின் லாபம் மற்றும் வருவாய் அளவுகளில் சந்தை கணிப்பைப் பூர்த்தி செய்த டிசிஎஸ், முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு பங்கிற்குச் சுமார் 8 ரூபாய் அளவிலான ஈவுத்தொகையை அறிவித்துள்ளது. இந்த ஈவுத்தொகையை நவம்பர் 7ஆம் தேதி அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவு
மேலும் டிசிஎஸ் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவு 1.6 சதவீதத்தில் இருந்து 24 சதவீதம் சரிந்தாலும் வரிக்கு பிந்தைய லாப அளவீட்டில் முதல் முறையாக 10000 கோடி ரூபாய் என்ற அளவீட்டைத் தாண்டியுள்ளது டிசிஎஸ்.
8.1 பில்லியன் டாலர் வர்த்தகம்
டிசிஎஸ் இக்காலாண்டில் நிலையான நாணயத்தில் வருவாய் அளவு 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல் ரீடைல் மற்றும் CMI பிரிவுகள் இக்காலாண்டில் அதிகப்படியான வருவாயை ஈட்டியுள்ளது. மேலும் டிசிஎல் நிறுவனத்தின் வர்த்தகப் புத்தகம் 8.1 பில்லியன் டாலராக உள்ளது.
அட்ரிஷன் விகிதம்
செப்டம்பர் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தில் புதிதாக 9840 ஊழியர்கள் சேர்ந்துள்ளனர், ஆனாலும் ஊழியர்கள் வெளியேறும் விகிதம் தொடர்ந்து உயர்வாகவே உள்ளது. இதனால் அட்ரிஷன் விகிதம் தற்போது 21.5 சதவீதமாக உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications