இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) மார்ச் 31 ஆம் தேதி உடன் முடிவடைந்த 2024-25 நான்காவது காலாண்டுக்கான தனது நிதியியல் முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. டிசிஎஸ் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின்படி, இக்காலாண்டில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகர லாபம் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 1.7% குறைந்துள்ளது.
பொதுவாகக் காலாண்டு அடிப்படையிலும், வருடாந்திர அடிப்படையிலும் லாபத்தில் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வந்த டிசிஎஸ், மார்ச் காலாண்டில் நிகர லாபம் 1.7 சதவீதம் குறைந்து ரூ.12,224 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் டிசிஎஸ் நிறுவனம் ரூ.12,434 கோடி நிகர லாபம் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டிசிஎஸ் மட்டும் அல்லாமல் இக்காலாண்டில் பெரும்பாலான ஐடி சேவை நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் அதிகப்படியான நெருக்கடியாக எதிர்கொண்ட நிலையில், வர்த்தகம், லாபம், வருவாய் அளவீடுகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால் டிசிஎஸ் இந்த சவால்களை தாண்டி அதிகப்படியான வருவாய் ஈட்டியுள்ளது. இதேபோல் வரி விதிப்பு, வர்த்தக தடை போன்ற காரணத்தால் இனி வரும் காலாண்டிலும் ஐடி துறை அதிகப்படியான பாதிப்பை எதிர்கொள்ள நேரிடம்.
இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் வருவாய் மார்ச் காலாண்டில் உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.61,237 கோடியாக இருந்த வருவாய், தற்போது 5.3% அதிகரித்து ரூ.64,479 கோடியை எட்டியுள்ளது. இதேபோல் டிசிஎஸ் இன்று கடந்த நிதியாண்டுக்கான முழு முடிவுகளையும் வெளியிட்டுள்ளது.
2024-25 முழு நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனம் மொத்தம் ரூ.2,55,324 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 6% அதிகமாகும். மேலும் இது நிலையான நாணய மதிப்பு அடிப்படையில் கணக்கிடும் போது வருவாய் 4.2% ஆக உயர்ந்துள்ளது.
2024-25ஆம் நிதியாண்டில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் பிராந்திய சந்தைகளில் காணப்பட்ட வலுவான செயல்பாடு தான் என டிசிஎஸ் தெரிவித்துள்ளது. குறிப்பாக, பிராந்திய சந்தைகளில் வருடாந்திர அடிப்படையில் 37.2% என்ற சிறப்பான வளர்ச்சி பதிவாகியுள்ளது.நான்காவது காலாண்டில், டிசிஎஸ் நிறுவனம் 24.2% ஆப்ரேட்டிங் மார்ஜின், 19.0% நிகர லாப வரம்பையும் பதிவு செய்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த நிதிநிலை அறிக்கையில், வருவாய் வளர்ச்சியைக் கொண்டிருந்தாலும், லாபத்தில் ஏற்பட்ட சிறு சரிவு சந்தை கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, சந்தை கணிப்பை எட்டாதது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிகம் கவனிக்கும் விஷயமாக உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications